சமநிலையை நிறுவுதல்
வாழ்க்கையின் யின் மற்றும் யாங்
இன்றைய வேகமான உலகம், தனிமனிதர்களான நமக்குள்ளும், உலகளாவிய சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு சமூகமாகவும், அமைதியான வாழ்விற்குப் பல சவால்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றம், பொருளாதார மற்றும் சமூக சமநிலையின்மை என அனைத்தும் நமது மனித விழிப்புணர்வில் உள்ள ஆழமான முரண்பாடுகளின் அறிகுறிகளே ஆகும்; இவற்றை வெறும் வெளிப்படையான தீர்வுகளைத் தேடுவதன் மூலம் மட்டும் சமன் செய்துவிட முடியாது.நமது வாழ்வின் உண்மையான அர்த்தத்தை அறியாமல், முரண்பாடாக, நமக்குள் ஒரு ஆழமான தேடலை மேற்கொள்ளாமல் வெளிப்புறத்திலேயே தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நமது இயல்பான தன்மையோடு நாம் இணைந்தால், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய அந்த மூல ஆதாரத்தை நம்மால் கண்டறிய முடியும்.
நமது மையப் பாதையைக் கண்டறிய, நமக்குள்ளே இருக்கும் ஒரு மெல்லிய சமநிலையை நாம் அறிந்திருக்க வேண்டும். நமக்குள்ளே இருக்கும் பெண்மை குணம் (யின்/Yin) மற்றும் ஆண்மை குணங்களின் (யாங்/Yang) மூலப்படிவங்கள் தான் நமது குணத்தை உருவாக்குகின்றன. இவை நமது ஆசை, உணர்ச்சி மற்றும் செயல்கள் வழியாக வெளிப்படுகின்றன. இந்த இரண்டு குணங்களும் நமது இடது மற்றும் வலது நாடிகளில் உள்ள நுட்பமான ஆற்றல் சமநிலையை தீர்மானிக்கின்றன. நமது வாழ்க்கை முறையில் ஏதேனும் ஒன்றில் மட்டும் அதிக ஈடுபாடு காட்டும்போது (உதாரணத்திற்கு: மிக அதிக வேலை அல்லது மிக அதிக உணர்ச்சிவசப்படுதல்), இந்த இயற்கை சமநிலையை கடினமாக்குகிறது. இதனால் தான் நமக்கு உடல்நலக் குறைவு, மன அழுத்தம் மற்றும் கவலைகள் ஏற்படுகின்றன.
சஹஜ யோகா தியானம் எண்ணங்களற்ற விழிப்புணர்வின் புதிய நிலையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆழ்ந்த மௌன நிலையில், நமக்கும், நம் சக உயிரினங்களுக்கும், நம் சமூகத்திற்கும் சரியான பாதையை நாம் காண்கிறோம், எல்லாமே தன்னிச்சையாக வெளிப்பட்டு, நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய உலகத்தை வெளிப்படுத்துகிறது.
"நாம் உலகைப் பிரதிபலிக்கிறோம். வெளி உலகில் இருக்கும் அனைத்து போக்குகளும் நம் உடலின் உலகில் காணப்படுகின்றன. நாம் நம்மை மாற்றிக் கொள்ள முடிந்தால், உலகில் உள்ள போக்குகளும் மாறும். ஒரு மனிதன் தன் இயல்பை மாற்றினால், அவனைப் பற்றிய உலகின் அணுகுமுறையும் மாறுகிறது. இதுதான் தெய்வீக ரகசியம். இது ஒரு அற்புதமான விஷயம் மற்றும் நம் மகிழ்ச்சியின் ஆதாரம். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க நாம் காத்திருக்க வேண்டியதில்லை."
மகாத்மா காந்தி
சஹஜ யோகா தியானம் நமது மனதிற்கு அப்பாற்பட்ட ஒரு எல்லையில் நமது ஆன்மீக அனுபவத்தை ஆழப்படுத்த ஒரு தனித்துவமான தருணத்தை வழங்குகிறது. சிந்தனையின் ஒழுங்கீனத்திலிருந்து நம்மை உண்மையிலேயே தூர விலக்கிக் கொள்ள இது ஒரு அமைதியான நேரமாகும். என்ன நடக்கப் போகிறது, அல்லது ஏற்கனவே நடந்ததைப் பற்றிய சிந்தனை. எண்ணங்களற்ற விழிப்புணர்வு தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது, இது வாழ்க்கையில் எந்த சூழ்நிலையையும் அமைதியாக சமாளிக்க அவசியமாகும்.

உங்களை நிலைநிறுத்தி சமநிலைப்படுத்தி வளருங்கள்.சிறந்தமனிதர்களாக வளருங்கள்.