ஒரு முக்கிய தருணம்
தூய மாற்றத்தின் ஒரு சாசுவதமான தருணம்
மே 5, 1970 அன்று, மும்பைக்கு அருகில் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள நார்கோல் என்ற கடற்கரையோரம் உள்ள சிறு நகரத்தில், மூளைப் பகுதியில் உள்ள ஆற்றல் மையமான சஹஸ்ராரா திறக்கப்பட்டது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. ஸ்ரீ மாதாஜியின் ஆன்மிகப் பாரம்பரியத்தில் பின்பற்றப்பட்ட அனைத்தும் அந்த நிகழ்விலிருந்து உருவானவை. ஒரு முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பு அல்லது அழகிய கலைப் படைப்பைப் போல, இந்த ஈடு இணையற்ற திருப்புமுனை பல ஆண்டுகளாக எதிரொலித்து, அவருடைய வேலை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் இயக்கியது.
ஸ்ரீ மாதாஜியின் கண்டுபிடிப்பு தனித்துவமானது. சஹஸ்ராரா திறப்பு என்பது தூய்மையான மாற்றத்தின் ஒரு தருணமாகும், மேலும் இது மனிதர்கள் தங்கள் வரம்புகளை மீறி சிறந்த ஏதோ ஒன்றுடன் தொடர்பு ஏற்படுத்த கூடிய முறையை வழங்குகிறது. அந்த நிகழ்வும் அது வழங்கிய விழிப்புணர்வும் அவர் எதிர்பார்ததுதான்.
"நான் வழிகளையும் முறைகளையும் தேடிக்கொண்டிருந்தேன்," என்று அவர் விளக்கினார், "எனது சொந்த பாணியிலான தியானத்தின் மூலம் நான் எல்லா வரிசைமாற்றங்களையும் சேர்க்கைகளையும் உருவாக்கி எனக்குள்ளே திட்டமிடுவேன். நான் ஒருவரைச் சந்தித்தால், அந்த நபருக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்தன, அவற்றை எப்படி சமாளிப்பது என்று பார்ப்பேன். நான் அந்த நபரை உள்ளுக்குள் ஆய்வு செய்ய முயற்சிப்பேன்."

மனிதனின் குழப்பமான நிலையை புரிந்துகொள்வதற்கான திறவுகோல் சூட்சும உடலைப் பற்றிய பண்டைய அறிவில் உள்ளது என்பதை ஸ்ரீ மாதாஜி அறிந்திருந்தார். பௌதிகத்திற்கு அப்பாற்பட்ட இந்த உடல் உண்மையானது, அலைவரிசை, ஆற்றல் மையங்கள் மற்றும் குண்டலினி எனப்படும் முதன்மையான ஆற்றல் மூலத்தால் ஆனது. செயல்பாடுகள் மற்றும் அமைப்பு அறிவியலுக்குத் தெரிந்த இயற்பியல் அமைப்பை பிரதிபலிக்கிறது, ஆனால் ஒரு நுட்பமான நிலையில்.
"நடக்கும் எல்லா விஷயங்களையும் என்னால் பார்க்க முடிந்தது," அவர் நினைவு கூர்ந்தார். "அந்த நாளில், எப்படியாவது, நான் கடைசி சக்கரத்தைத் திறக்க வேண்டும் என்று சொன்னேன்."
இந்த சக்கரம் அல்லது ஆற்றல் மையம் சமஸ்கிருதத்தில் சஹஸ்ராரா என்று அழைக்கப்படுகிறது, மூளையின் மூட்டு பகுதியில் அதன் இருக்கை உள்ளது. இந்த ஆற்றல் மையத்தின் திறப்பு, எல்லாவற்றையும் இயக்கத்தில் வைக்க தூண்டுதலாக இருக்கும், சத்தியத்திற்கான நுழைவாயிலாக இருக்கும்.

நான் தனியாக இருந்தேன், நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன். ஒரு வார்த்தை சொல்ல அருகில் யாரும் இல்லை. பின்னர், தியானத்தில், சஹஸ்ராரத்தைத் திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தேன். சஹஸ்ராரத்தைத் திறக்க நான் விரும்பிய தருணத்தில், நான் கவனித்தது என்னவென்றால், குண்டலினி எனக்குள் ஒரு தொலைநோக்கி போல உயர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாகத் திறந்து, மேல்நோக்கி பயணித்தது. அது உருகிய, சிவப்பு-சூடான இரும்பின் நிறம் போல இருந்தது.
“பின்னர், குண்டலினியின் வெளிப்புற அமைப்பை நான் பார்த்தேன், அது ஒவ்வொரு சக்கரத்திலும் ஒலிகளை உருவாக்கியது. பிரம்மரந்திரத்தைத் துளைக்க குண்டலினி எழுந்தது."
பிரம்மரந்திரா என்பது தலையின் மேற்பகுதியில் உள்ள உச்சிக்குழி எலும்புப் பகுதி. ஸ்ரீ மாதாஜி விவரித்த அனுபவம் என்னவென்றால் ஆத்ம விழிப்புணர்வு, அறிவின் மலர்ச்சி மற்றும் பலர் விரும்பும் விழிப்புணர்வு. பலர் தேடும் ஒரு தீர்வைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார், இது பொதுவாக பல வருட அர்ப்பணிப்பு மற்றும் உழைப்புடன் தொடர்புடைய பரிசாகும்.
“மேலே இருந்த எல்லா சக்தியும் திடீரென்று ஒவ்வொரு திசையிலிருந்தும் குளிர்ந்த காற்று வீசுவது போல எனக்குள் நுழைந்ததை அந்த தருணத்தில் உணர்ந்தேன். நான் முழுதும் திறப்பதை பார்த்தேன், ஒரு பெரிய சாரல் மழை என் தலை முழுவதும் பாய தொடங்கியது. நான் இப்போது தொலைந்துவிட்டதாக உணர்ந்தேன், நான் அங்கு இல்லை. அருள் மட்டுமே இருந்தது. இது எனக்கு முற்றிலும் நடப்பதை நான் பார்த்தேன்."
இந்த ஆத்ம விழிப்புணர்வு அனுபவம், இந்த உயர்ந்த ஞானம், உலகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை ஸ்ரீ மாதாஜி அறிந்திருந்தார்.
“வேலையைத் தொடங்குவதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். குழப்பம் தீர்ந்தது. கடைசியில் நேரம் வந்தது. பயப்பட ஒன்றுமில்லை. இது இறுதியில் செய்யப்பட வேண்டியிருந்தது. இந்த நோக்கத்திற்காக மட்டுமே நான் இந்த உலகத்திற்கு வந்தேன், மனிதர்களின் கூட்டு உணர்வை எழுப்ப வேண்டும். மக்கள் தங்கள் ஆத்ம விழிப்புணர்வைப் பெறும் வரை அல்லது அவர்களின் சுயத்தை புரிந்து கொள்ளும் வரை, இந்த பணி சாத்தியமற்றது என்று நான் நினைத்தேன். இவ்வுலகில் வேறு யாரேனும் எதைச் செய்ய முயற்சித்தாலும் எந்தப் பயனும் இல்லை.
ஸ்ரீ மாதாஜி தனது ஆன்மீகப் பணி எவ்வாறு தொடங்கியது என்பதை விவரித்தார். "என்னை நன்கு அறிந்த ஒரு வயதான பெண்ணிடம் நான் அதைச் செய்தேன். அவருக்கு விழிப்புணர்வு கிடைத்ததும் நான் திருப்தி அடைந்தேன். இன்னும் பலர் தங்கள் விழிப்புணர்வை பெற முடியும் என்று நான் உணர்ந்தேன். ஒருவருக்கு உணர்த்துவது என்பது எளிதாக இருந்தது. ஒரு நபருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் எளிதானது, ஆனால் அதை மக்கள் மத்தியில் ஒரு கூட்டு மட்டத்தில் செயல்படுத்த, மேலும் சில வேலைகள் தேவைப்பட்டன.
அனைவரும் ஒரு விழிப்புணர்வுடன் பலனைப் பெற வேண்டும், ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் கூட்டு அளவில் இதற்கு முன் செய்யப்படவில்லை என்பது உண்மைதான். நான் தியானத்தின் மூலம் இதையெல்லாம் அடைந்தேன்.
அவரது பணி அடிமட்ட அளவில் பல ஆண்டுகளாக அமைதியாக தொடர்ந்தது. "எனக்குள் இருக்கும் சக்திகளைப் பற்றி யாருக்கும் தெரியாது. யாருக்கும் என்னைத் தெரியாது அல்லது என்னைப் பற்றி எந்த கருத்தும் இல்லை. பெரும்பாலான மக்கள் அவர் என்ன சொல்கிறார் என்பதற்கு தயாராக இல்லை. அவரது செய்தி, புரட்சிகரமானது மற்றும் தைரியமானது, பெரும்பாலான மனிதர்களுக்கு தங்களைப் பற்றிய புரிதலுக்கு ஒரு அடிப்படை சவாலாக இருந்தது.

ஆனால் அந்த பெண்மணியில் குண்டலினி விழித்தெழுந்தபோது, அவளுக்குள் ஏதோ ஒரு நுட்பமான சக்தி நுழைந்ததை நான் உணர்ந்தேன், என்று ஸ்ரீ மாதாஜி நினைவு கூர்ந்தார். பின்னர் மேலும் பன்னிரண்டு பேர் தங்கள் விழிப்புணர்வை பெற்றனர். அவர்களின் கண்கள் பிரகாசிக்கத் தொடங்கியதால் அவர்கள் வியந்தார்கள். அவர்களுக்குள் நுழைந்த ஒரு தனித்துவமான உணர்திறன் சக்தியால் அவர்கள் எல்லாவற்றையும் தெளிவாக உணரவும் பார்க்கவும் தொடங்கினர், இதன் மூலம் அவர்கள் அனைத்தையும் உணர முடிந்தது.

ஆத்ம விழிப்புணர்வு மூலம், மக்கள் தங்கள் உண்மையான சுயமாக மாறினர். அவர்கள் இதுவரை அறியாததை உணர்ந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அடுத்தவர்களிடம் பார்க்கத் தொடங்கினர். மற்றும் அதனுடன், உண்மையான ஒருங்கிணைப்பு தொடங்கியது.
இந்தப் பன்னிரண்டு பேரும் பன்னிரெண்டு வெவ்வேறு இயல்புகளை உடையவர்கள் என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன், எப்படியாவது அவர்களுடன் அமர்ந்து, ஆத்மா கொண்டிருக்கும் ஒளியின் சக்தி எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும், என்று அவர் கூறினார். “நாம் ஒரு ஊசியின் உதவியால் பூக்களை ஒரே மாலையில் இழைப்பது போன்றது... அவர்கள் உணர்ந்துகொண்டபோது, அவர்களுக்குள், ஒவ்வொருவருக்குள்ளும், அது ஒன்றன் பின் ஒன்றாக ஒரே சரமாக ஒருங்கிணைவதை நான் கவனித்தேன்.