குடும்பத்தின் முக்கியத்துவம்

குடும்பத்தின் முக்கியத்துவம்

சமூகத்தின் அடித்தளம்

ஒரு வெற்றிகரமான சமூகம் அதன் குடும்பங்களின் வலிமை மற்றும் ஒருவருக்கொருவருக்குள்ள உறவுகள் மற்றும் பங்ககளிப்பை சார்ந்திருக்கிறது. ஸ்ரீ மாதாஜி அடிக்கடி இத்தகைய சமநிலையான சமுதாயத்தைப் பற்றிய தனது நோக்கை வெளிப்படுத்தினார். மேலும் அவரது வாழ்நாள் முழுவதும், குடும்பத்திலும், சமூகத்திலும், உலக அரங்கிலும் ஒரு பெண் நிறைவேற்றக்கூடிய பல்வேறு பாத்திரங்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.

சிறு வயதிலேயே தன் குடும்பத்தில் பொறுப்பை ஏற்றார். மூத்த மகளாக இல்லாவிட்டாலும், அவரது பெற்றோர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது தன் உடன்பிறப்புகளைக் கவனித்துக்கொண்டார் - அவரும் ஒரு இளம் பெண்ணாக அந்த இயக்கத்தில் இணைந்தார். ஒரு மனைவியாகவும் தாயாகவும் இருந்தபோது, ​​ஸ்ரீ மாதாஜி தனது குழந்தைகளைப் பராமரித்ததோடு, ஐக்கிய நாடுகள் கடல்சார் அமைப்பில் தனது பணிக்காக சர்வதேச அளவில் பயணம் செய்தபோது தனது கணவருக்கும் ஆதரவாக இருந்தார். மனித நேயத்தின் மீதான அவரது அக்கறை உலக அளவில் இருந்தாலும், தன் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வரை காத்திருந்து, தன் பொதுப்பணியைத் தொடங்கினார்.

கணவன் மனைவிக்கு இடையிலான உறவின் இயக்கவியல் பற்றி, ஸ்ரீ மாதாஜி ஒருமுறை கூறினார், “நீங்கள் சமநிலையில் இருக்க வேண்டும் - கணவன் மட்டுமோ மனைவி மட்டுமோ அல்ல, ஆனால் அவர்கள் இருவரும்(சமநிலையாக இருக்க வேண்டும்). அவர்கள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும், ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் ஒரு தேரில் ஒன்று இடதுபுறமும் ஒன்று வலதுபுறமும் இரண்டு சக்கரங்கள் இருப்பதை போல மக்கள் காணும் வகையில் இருக்க வேண்டும்." சமநிலை சமத்துவத்தை தேவையாக்குகிறது. "எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. அவர்கள் சமமானவர்கள், ஆனால் ஒத்தவர்கள் அல்ல."

நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கும்போது, ​​உங்களைச் சுற்றி ஒரு அழகான, மிக அழகான பிரபஞ்சத்தை உருவாக்குகிறீர்கள். 

ஸ்ரீ மாதாஜி ஒரு மனைவியின் குணங்களை பூமிதாயின் குணங்களுடன் ஒப்பிடுகிறார் .அவர் ஊட்டமளிக்கிறார் , அவர் தாராள குணத்துடனும் அன்பாகவும் இருக்கிறார் , மேலும் அவரா ல் அழகை உருவாக்க முடியும். அவர் அமைதியை உருவாக்குபவராகவும் இருக்கிறார், குடும்பத்தில் உறவுகளை இணக்கமாக வைத்திருக்க உதவுகிறார். அவர் ஒரு குடும்பத்தின் வலிமையின் ஆதாரமாக இருக்கிறார், மேலும் அவரது பங்களிப்பு குடும்பத்துக்கு அப்பாலும் விரிவடைகிறது. "ஒரு பெண் தன் மகனுக்கும், தன் கணவருக்கும், அனைத்து சமுதாயத்திற்கும் சக்தியை வழங்குகிறாள் "

Aldobrandinische Madonna nach Tizian (Graham Brown, 2009)

ஒரு கணவனுக்கு தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்து அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. கணவன்-மனைவி இடையே பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்தவை மற்றும் சமமான மதிப்புமிக்கவை.

குடும்ப வாழ்க்கையின் மற்ற முக்கிய அம்சங்களில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், இளைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெரியவர்களுக்கு இடையிலான உறவுகள் அடங்கும். குடும்பத்தில் சமநிலையும் அமைதியும் இருக்கும்போது, ​​அது எதிரொலித்து, சமூகத்தில் அமைதியான மற்றும் சமநிலையான விளைவை உருவாக்குகிறது.

மனைவி, அம்மா, பாட்டி (மற்றும் கொள்ளு பாட்டி) என தனது சொந்த பொறுப்புகளை நிறைவேற்றிய போதிலும், ​​ தொலைநோக்கு பார்வையுடன், ஸ்ரீ மாதாஜியின் கவனம் உலக அளவில் இருந்தது.1995 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றிய போது, ​​ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமநிலை மற்றும் சார்புநிலை பற்றிய செய்தியை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார். அங்கே அவர் பெண்களின் நிலைமை குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தினார், மேலும் பல சமூகங்கள் குறைத்து மதிப்பிடும் ஒரு தாயின் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.; இது பல சமூகங்கள் குறைத்து மதிப்பிடும் ஒரு பாத்திரமாக உள்ளது.

அனைத்து உண்மையான சிறந்த தலைவர்களையும்ப் போலவே, அவர் ஒன்றிணைக்கவும் ஊக்குவிக்கவும் முயன்றார்; அவர் உலகம் முழுவதையும் தன் குடும்பமாகக் கருதினார், இனம், மதம் அல்லது தேசியத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களும் அவருடைய அக்கறைக்கும் கவனிப்புக்கும் தகுதியானவர்கள்.

SHARE PAGE