விரிவடையும் வட்டம்

விரிவடையும் வட்டம்

மாற்றத்தின் காற்று

மே 27, 1964 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார். சர் சி.பி. கப்பல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தில் இருந்தார். ஜூன் 2, செவ்வாய்கிழமை அன்று, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக லால் பகதூர் சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், விரைவில் இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் செய்தி வந்தது.

சர் சி.பி. இங்கிலாந்திலிருந்து மும்பைக்குத் திரும்பிய நேரத்தில், செய்தித்தாள்கள் திரு. சாஸ்திரி நோய்வாய்ப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன. ஸ்ரீ மாதாஜி தனது கணவரை திரு. சாஸ்திரிக்கு தனது சேவைகளை வழங்க உடனடியாக புது தில்லி செல்லுமாறு வலியுறுத்தினார். லால் பகதூர் சாஸ்திரி தன் கணவன் மீது நம்பிக்கை வைத்திருந்ததால், முடிந்தவரை அவருக்கு உதவுவது அவருடைய கடமை என்று அவர் உறுதியாக உணர்ந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, புதுதில்லியில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டபோது, ​​சர் சி.பி. குணமடைந்த திரு.சாஸ்திரியை காண முடிந்தது.

இந்த தற்செயலான சந்திப்பின் போதுதான் லால் பகதூர் சாஸ்திரி ஸ்ரீ மாதாஜியின் கணவரைப் பிரதமரின் இணைச் செயலாளராக இந்திய தேசத்தின் சேவையில் இணைந்து அவருக்குத் துணையாக பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீ மாதாஜி மும்பையில் லால் பகதூர் சாஸ்திரிக்கு விருந்தினர்களை அறிமுகப்படுத்துகிறார்
ஸ்ரீ மாதாஜி மும்பையில் லால் பகதூர் சாஸ்திரிக்கு விருந்தினர்களை அறிமுகப்படுத்துகிறார்

"லால் பகதூர் சாஸ்திரி - அ லைப் ஆப் ட்ரூத்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்றில , சர் சி.பி. “நாங்கள் இருவரும் பிரதமர் சாஸ்திரியை சந்தித்தபோது, ​​துறவிகள் மற்றும் முனிவர்கள் பற்றியும், மதம் மற்றும் ஆன்மீகம் குறித்தும், அவர் அறிந்த துறைகள் குறித்தும் அடிக்கடி பேசி, இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர நிர்மலாவை ஊக்குவித்தார். இருப்பினும், நிர்மலா ஆன்மிகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டிருந்தார், அரசியலில் நாட்டம் காட்டவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக, அவரது கணவர் அரசு விவகாரங்களில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஸ்ரீ மாதாஜி மிகவும் அமைதியான சமூக சேவகராக இருந்தார். மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் அருகே உள்ள சானடோரியம் ஒன்றிற்காக பணம் சேகரித்தார். அவர் ‘பார்வையற்றவர்களின் நண்பர்கள்’ என்ற சமூகத்தின் தலைவரானார். மீரட்டில், ஒரு அகதிகள் இல்லம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லத்தை துவங்கினார். மற்றும் ஒரு பெரிய தொழுநோயாளிகள் இல்லத்திற்கும் உதவினார்.

அக்டோபர் 1969 இல், ஸ்ரீ மாதாஜியின் முதல் மகள் கல்பனா, பிரபாத் ஸ்ரீவஸ்தவ் என்பவரை மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீ மாதாஜி தனது மகள் கல்பனாவுடன், திருமணத்தின் போது
ஸ்ரீ மாதாஜி தனது மகள் கல்பனாவுடன், திருமணத்தின் போது
மகள் கல்பனாவின் திருமணத்தில் சர் சிபி மற்றும் மருமகன் பிரபாத்துடன் ஸ்ரீ மாதாஜி.
மகள் கல்பனாவின் திருமணத்தில் சர் சிபி மற்றும் மருமகன் பிரபாத்துடன் ஸ்ரீ மாதாஜி.

1970 அக்டோபர் தொடக்கத்தில், ஸ்ரீ மாதாஜியின் சொந்த தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவர் தனது தாயைப் பார்க்க ஒரு வெளிநாட்டு பயணத்திலிருந்து திரும்பினார், ஆச்சரியப்படும் விதமாக அவரை மகிழ்ச்சியான மனநிலையில் கண்டார். அவருடைய தாய், தந்தை இருவரும் நீ கண்டுபிடிக்க விரும்பியதை கண்டுபிடித்துவிட்டாயா என்று அவரிடம் கேட்டனர். அதற்கு ஸ்ரீ மாதாஜி கூட்டாக ஆத்ம விழிப்புணர்வு வழங்கும் முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11, 1970 அன்று, அவரது தாயார் கொர்னேலியா கருணா சால்வே நாக்பூரில் காலமானார்.

அதற்கு பிறகு சிறுது காலத்தில், ஸ்ரீ மாதாஜி பாரிஸுக்கு செல்லும் முதல் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல அழைக்கப்பட்டார், அதன் பிறகு அவர் விமான நிறுவனத்தில் பணிபுரியும் தனது இளைய சகோதரர் ஹெச்.பி.சால்வேயைப் பார்க்க தெஹ்ரானுக்குச் சென்றார். [1]

அவருடன் நேரத்தை செலவிடும் போது, ​​ஹெச்.பி. தன் மூத்த சகோதரிக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருப்பதை படிப்படியாக உணர்ந்தார். அச்சமயத்தில், அவருக்கு இந்தியாவில் சுமார் 12 பின்பற்றுபவர்கள் இருந்தனர், அவர்கள் ஸ்ரீ மாதாஜியை ஆசிரியராகவும் குருவாகவும் ஆர்வமாக ஏற்று கொண்டிருந்தனர்.

1970 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, அவர் உண்மையில் ஒரு சக்திவாய்ந்த மாற்றத்தை அனுபவித்ததாக தனது சகோதரரிடம் தெரிவித்த பிறகு, ஸ்ரீ மாதாஜி ஆன்மீக நாட்டம் கொண்ட அவரது சில நண்பர்களுக்கு ஆத்ம விழிப்புணர்வைக் கொடுக்க விருப்பம் தெரிவித்தார். அவர்கள் ஷிராஸில் ஒரு சுற்றுலாப் பயணத்திலிருந்து தெஹ்ரானுக்குத் திரும்பும்போது, ​​எச்.பி. சால்வே சில நண்பர்களை அழைத்து ஸ்ரீ மாதாஜியுடன் இரவு உணவு மற்றும் ஆன்மீக சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அடுத்த நாள், சுமார் 20 நண்பர்கள், பத்திரிகைகளைச் சேர்ந்த சிலர், இரவு உணவிற்காகவும் மேலும் முக்கியமாக, அவர்களின் ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும் அவரது வீட்டிற்கு வந்தனர்.

“டாக்டர் திவான் என்ற ஒரு நன்மகன் ஆத்ம விழிப்புணர்வைப் பெற்ற பிறகு, அவரது தலையின் உச்சியில் இருந்து சந்தன மணம் வீசுவது போல் தோன்றியது. ஸ்ரீ மாதாஜி இவ்வளவு தூரத்தில் அமர்ந்துக் கொண்டு எப்படி ஒருவரின் உடலில் இத்தகைய நறுமணத்தை பரப்புகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கிடையில், கடுமையான மூட்டுவலி இருந்ததால் ஊன்றுகோலில் மட்டுமே வந்த ஒரு பார்சி பெண்மணி, ​​​​தன் ஆத்ம விழிப்புணர்வுப் பிறகு ஊன்றுகோல் இல்லாமல் நடந்து சென்றார். மறுநாள் தனது காரையும் ஓட்டிச் சென்றார்." என்று எச்.பி. சால்வே நினைவு கூர்ந்தார்.

அடுத்த நாள் டெஹ்ரானில் உள்ள முன்னணி ஆங்கிலப் பத்திரிக்கைகள் இந்த நிகழ்வை செய்தியாக அச்சிட்டன. என்ன நடந்தது என்பதற்கு சாட்சிகள் இருப்பதாக அவர்கள் கூறினர். அதன் பிறகு ஸ்ரீ மாதாஜியைப் பார்க்க ஏராளமானோர் குவிந்தனர். அவரது சகோதரர் கூறியது போல், "அவருடைய புகழ் மிகவும் அதிகமாக இருந்தது, அவர் முதலில் டெஹ்ரானுக்கு வந்தபோது நான் அவரை என் சகோதரி என்று அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் திரும்பும் போது, ​​​​நான் அவருடைய சகோதரனாக அறிமுகப்படுத்தப்பட்டேன்." விரைவில், எச்.பி. சால்வே பாபாமாமா என்று அழைக்கப்படுவார், இது "அன்னையின் சகோதரர்" என்பதற்கான அன்பான வார்த்தையாகும்.

" நாம் அனுபவிக்கக்கூடிய மிக அழகான விஷயம் மாயமானது...... அது அனைத்து உண்மையான கலை மற்றும் அறிவியலின் ஆதாரமாகும்."
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

1. ↑ எச்.பி. சால்வே, 'மை மெம்வார்ஸ்' புது தில்லி: லைஃப் எடர்னல் டிரஸ்ட், 2000.

SHARE PAGE