உலகத்திற்கான ஒரு டவுன் ஹால் (நகர மண்டபம்)
இதயங்கள் சந்திக்கும் இடம்

காக்ஸ்டன் ஹால் மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ளது.
இது 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது மற்றும் இங்கிலாந்தில் முதல் அச்சகத்தை நிறுவிய வில்லியம் காக்ஸ்டன் நினைவாக பெயரிடப்பட்டது, இது அறிவை அணுகுவதில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு கண்டுபிடிப்பாகும்.
துணிச்சலான புதிய கருத்துக்கள் பரிமாறப்பட்ட மற்றும் ஆராயப்பட்ட இடமாக இது நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
முதலில் காக்ஸ்டன் ஹால் அரசாங்கத்தின் ஒரு கட்டிடமாக இருந்தது; ஒரு நகர மண்டபம். இருப்பினும், இது பல ஆண்டுகளாக இரட்டை பொறுப்பில் உள்ளது.
இரைச்சல் மிக்க கூட்டங்கள், பேரணிகள், மனுக்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் அரசியல் செயல்பாட்டிற்கான அழைப்புகளுடன் பொதுத்துறை சார்ந்த விழாக்கள் மற்றும் பிரபலங்களின் திருமணங்கள் இங்கு நடந்துள்ளன.
காக்ஸ்டன் மண்டபத்தின் கதவுகளிலிருந்துதான் 20 ஆம் நூற்றாண்டின் பல சிறந்த யோசனைகள் மற்றும் இயக்கங்கள் உலக அரங்கில் பரவின.
பெண்களின் வாக்குரிமை இயக்கம், பொதுவுடமை வாதம் மற்றும் அடிமைத்தனத்தின் பின்விளைவுகளைக் கையாளும் முதல் பான்-ஆப்பிரிக்க மாநாடு ஆகியவற்றின் குரல்கள் இங்கே என்ன நடந்தது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள்.
எனவே, ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி 1977 இல் தனது செய்தியை பொது அரங்கில் கொண்டு செல்ல முடிவு செய்தபோது, இந்த மண்டபத்தை தேர்ந்தெடுத்தது சுவாரஸ்யமானது.
1977 மற்றும் 1983 க்கு இடையில் ஸ்ரீ மாதாஜி இங்கு கிட்டத்தட்ட நூறு முறை மேடையை நடத்தினார், இது பரவலாக பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறித்தது.
அவளுடைய வார்த்தைகள் அனைவருக்கும் உடையதாக இருந்தது.
அழைப்பிதழ் வெளிப்படையானது. அனுமதி இலவசம்.
சிறந்த பெங்காலி கவிஞரும் நோபல் பரிசு வென்றவருமான ரவீந்திரநாத் தாகூர் 1913 கோடையில் இங்கு வெற்றிகரமான தொடர் சொற்பொழிவுகளை நடத்தினார்.
அவரின் விரிவுரைகள், "பிரபஞ்சத்துடனான தனிமனிதனின் உறவு", "ஆத்ம விழிப்புணர்வு", " அன்பினால் உள்ள விழிப்புணர்வு" மற்றும் "சுயத்தின் பிரச்சனை" போன்ற தலைப்புகளுடன் இருந்தன.
சுமார் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீ மாதாஜி அவரே நேரடியாகப் பேசிய கருப்பொருள்கள் இவை. தனது முன்னோடியைப் போலவே, அவர் மேற்கத்திய பார்வையாளர்களுடன் பண்டைய கிழக்கு அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார் மற்றும் அவர்களுக்குள் ஒரு பயணத்தை ஏற்படுத்த விரும்பினார்.
"நமக்குள் இருக்கும் இடைவெளியும் நேரமும் ஆட்சி செய்வது முடிவுறும் மற்றும் பரிணாமத்தின் இணைப்புகள் ஒற்றுமையுடன் ஒன்றாகும்." ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூர்

இருப்பினும், ஸ்ரீ மாதாஜியைப் பொறுத்தவரை, அவரது விரிவுரைகளின் நோக்கம் வெறுமனே ஒரு புதிய யோசனையை ஆராய்வது அல்ல, ஆனால் அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதாகும்.
அவரது விரிவுரைகள் எப்போதும் கூடுதல் அன்பளிப்புடன் வந்தன. மாலையில், இறுதியில் அவர் எப்போதும் மக்களுக்கு ஆத்ம விழிப்புணர்வு அனுபவத்தை வழங்கினார்.
ஆழ்ந்த தியானத்தின் அமைதியில் அவர்களை வழிநடத்தி, பார்வையாளர்களுக்கு அவர்களுக்கே உரிய ஆழத்தை உணர வாய்ப்பு வழங்கப்பட்டது. தாகூரின் "பிரம்மத்தை உணர்தல்", ஸ்ரீ மாதாஜியின் "உண்மையான சுயத்தின் அனுபவம்" ஆனது.
மீண்டும் ஒரு புரட்சிகர இயக்கம் காக்ஸ்டன் ஹாலின் படிகளில் இருந்து தொடங்கப்பட்டது. ஆன்மீக மட்டத்தில் உயரும் மனிதனின் அறிவுத் திறனில் ஒரு அடிப்படையான படி எடுக்கப்பட்டது, பலர் தங்களுக்குள் ஒரு ஆழமான மாற்றத்தையும் மேலும் அவர்களுக்கு உள்ள உலகக் கண்ணோட்டத்தில் ஒரு திருப்பத்தையும் உணர்ந்தனர்.
ஆறு ஆண்டுகளாக ஸ்ரீ மாதாஜி காக்ஸ்டன் ஹாலில் அனைத்து தரப்பு மக்களிடமும் பேசினார். அவர்களின் எல்லா கவலைகளுக்கும் அவர் நேரம் ஒதுக்கினார்.
அந்த பெரிய கேள்விகளுக்கு அவர் உரையாற்றினார்; "நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?", "என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?", கடவுள் ஏன் நம்மைப் படைத்தார்?", "கடவுள் இருக்கிறாரா?" என்ற கேள்விக்கு கூட.
இறுதியில் அனைவரும் தங்கள் உண்மையான ஆத்மாவுடன் இணைவதற்கு அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு மேற்கில் ஸ்ரீ மாதாஜியின் பொது ஊழியம் உண்மையிலேயே தொடங்கியது. இங்கே காக்ஸ்டன் ஹாலில், அனைவருக்கும் வரவேற்பு இருந்தது, மேலும் மிகவும் மதிப்புமிக்கது இலவசமாக வழங்கப்பட்டது.
ஆத்ம விழிப்புணர்வு பெற்றவர்களில் பலர் அவரிடம் தொடர்ந்து இருந்துகொண்டு, உண்மையைத் தேடும் பலரைச் சென்றடைவதில் அவரது முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர்.
1980 ஆம் ஆண்டு ஸ்ரீ மாதாஜி அவர்களே, “(உண்மைக்கான) தேடல் நடந்து கொண்டிருக்கிறது, மேலும் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன (உண்மையை உறுதியளிக்கும் மக்கள்).
இது கடையல்ல, இது ஒரு கோவில், சந்தையில் உள்ள ஒரு கோவிலின் மதிப்பு மிகவும் குறைவு. கோயிலுக்குச் செல்ல ஏழு மலைகள் ஏறிச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அதிக மதிப்பு உண்டு.
ஆனால் ஒரு சிலரால் மட்டுமே உயிருடன் அதை அடைய முடியும். எனவே, மக்களுடன் பேசுவதற்காக கோவில், லண்டன், காக்ஸ்டன் ஹாலுக்கு வர வேண்டும்.
ஸ்ரீ மாதாஜி தனது ஆத்ம விழிப்புணர்வு என்ற பரிசுடன் அனைவரையும் வரவேற்று அரவணைத்தார்.
தாகூரின் வார்த்தைகளில், "எல்லா கட்டுப்பாடுகளை வரவேற்பதும், அவற்றைக் கடந்து செல்வதும் அன்பின் உயர்ந்த செயல்பாடாகும்", மேலும் ஸ்ரீ மாதாஜியின் அன்பும், அன்பின் பரிசும் இதயத்தையும் மற்றும் உலகையும் ஒளியுயூட்டுவதற்கு அனைத்து தடைகளையும் தாண்டியது.
அதை நம்மால் மாற்ற முடியாது.
அதை நம்மால் உருமாற்ற முடியாது.
அதை நாம் கருத்திற் கொள்ள முடியாது.
