சஹஸ்ரார சக்கரம்

சஹஸ்ரார சக்கரம்

ஒருங்கிணைப்பு

சஹஸ்ரார சக்கரம் (அதாவது, ஆயிரம்) நம் தலையின் உச்சியில் அமைந்துள்ளது மற்றும் "ஹோமோ சேபியன்ஸ்" என்ற நமது பரிணாம பயணத்தின் உச்சக்கட்டத்தை குறிக்கிறது. பூமியில் 4.8 நூறுகோடி ஆண்டுகளின் முடிவில் தோன்றிய மனித இனம், நமது மூளை என்ற ஒரு ஆதாயத்தின் காரணமாக முழு கிரகத்தையும் ஆதிக்கம் செலுத்துகிறது. நமது மனித வாழ்வின் நோக்கம் என்ன? இந்த மூளையை ஏதோ ஒரு மாயையான சக்தி அல்லது பண ஆதாயத்திற்காக பயன்படுத்துவதா, அல்லது எல்லையற்ற விண்வெளி மற்றும் நேரத்தின் எல்லையற்ற துறையில் இறந்த பொருளின் உருவாக்கம், பரிணாமம் மற்றும் அழிவின் மர்மங்களை ஆராய்வதற்கான நமது வரையறுக்கப்பட்ட விஞ்ஞான ஆர்வத்தை திருப்திப்படுத்தவா? அல்லது நம் மனித வாழ்க்கைக்கு ஒரு சிலரால் மட்டுமே உணர முடிந்த உயர்ந்த நோக்கம் உள்ளதா?

சஹஸ்ரார சக்கரத்தால் சூழப்பட்ட தலை உச்சி பகுதியில் உள்ள பிரம்மராந்திராவை (இந்திய வேதங்களில் தலையின் கிரீடத்தின் திறப்பு என விவரிக்கப்பட்டுள்ளது) குண்டலினி துளைப்பதன் மூலம் நமக்கு ஆத்ம விழிப்புணர்வு கிடைக்கிறது . இதன் மூலம், நமது மனித விழிப்புணர்வு ஒரு புதிய புலனுணர்வு மண்டலத்திற்குள் நுழைகிறது. இது நமது மன செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட விழிப்புணர்வு. இந்தச் சக்கரம் நமது மைய நரம்பு மண்டலத்தில் யதார்த்தத்தைப் பற்றிய நேரடியான, முழுமையான உணர்வை நமக்கு அளிக்கிறது மற்றும் நிர்விகல்ப சமாதி எனப்படும் சந்தேகத்திற்கு இடமில்லாத விழிப்புணர்வை நாம் சிரமமின்றி நமக்குள் நிலைநிறுத்துகிறோம் .

சஹஸ்ரார சக்கரத்தின் முதன்மைத் குணம் பிரபஞ்சத்தின் அனைத்து கூறுகளுடனும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகும். சஹஸ்ராரத்தின் மூலமாகவே, எல்லாவற்றிலும் பரவியுள்ள ஆன்மீக சக்தியுடன், முழுமையான உண்மைக்கான தொடர்பை நாம் அனுபவிக்கிறோம். சஹஸ்ராரம் நமது இறுதி இலக்கை குறிக்கிறது. நம் வாழ்வின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ள, நம்மை உருவாக்கிய சக்தியின் அங்கமாக இருக்கும் விழிப்புணர்வின் உயர்ந்த நிலைகளை நாம் அறியவேண்டும்.

ஏழாவது மையம் ஆயிரக்கணக்கான நாடிகள் மற்றும் சக்கரங்களைக் கொண்ட முழு நுட்பமான அமைப்பின் சக்திகளையும் குணங்களையும் ஒருங்கிணைக்கிறது. அனைத்து சக்கரங்களின் செயல் முறையும் சஹஸ்ராரத்தில் உள்ள சக்கரங்களின் அந்தந்த இருக்கைகளால் தூண்டப்படுகிறது. சூப்பர் கணினியான நமது மூளை எவ்வாறு ஒவ்வொரு தகவலும் தொடர்புகொள்ளப்பட்டு நமது மைய நரம்பு மண்டலத்தில் செயல்படுத்தி கட்டுபடுத்துகிறதோ அது போலவே, சஹஸ்ராரா சக்கரம் நமது முழு நுட்பமான அமைப்புடன் அதே பாணியில் தொடர்பு கொள்கிறது.

ஸ்ரீ மாதாஜி வரைந்த அசல் ஓவியம்
ஸ்ரீ மாதாஜி வரைந்த அசல் ஓவியம்

இடம்:
உங்கள் சஹஸ்ரார சக்கரம் உங்கள் மூளையின் லிம்பிக் அமைப்பில் அமைந்துள்ளது. உங்கள் உள்ளங்கையின் மையத்தில் சஹஸ்ரார சக்கரத்தின் நுண்ணதிர்வுகளை நீங்கள் உணரலாம்.

குணங்கள்:
சஹஸ்ரார சக்கரத்தின் மூலம் உங்களை உருவாக்கிய சக்தியுடன் நீங்கள் இணைய முடியும். இதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை நீங்கள் கண்டறியலாம். இது உங்கள் இறுதி இலக்கை பிரதிபலிக்கிறது - பூமியில் சொர்க்கத்தின் உணர்தல்.

சஹஸ்ரார சக்கரத்தின் குணங்கள் பின்வருமாறு:
• பிரபஞ்சத்துடன் "ஒருமை" உணர்வு ("ஒருங்கிணைப்பு" என்றும் அழைக்கப்படுகிறது)
• எண்ணங்களற்ற விழிப்புணர்வு அல்லது மன அமைதி
• தெய்வீக சக்தி பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்திற்கு இடமில்லாத விழிப்புணர்வு"

ta-7-Sahasrara-01

மூலதாரா சக்கரம் முதல் ஆக்ஞா சக்கரம் வரை உங்களின் ஆறு முக்கிய சக்கரங்கள் ஒவ்வொன்றும் உங்கள் மூளைக்குள் வேர்களைக் கொண்டுள்ளன. நீங்கள் சஹஜ யோகா பயிற்சி செய்யும் போது, ​​குண்டலினி உயர்கிறது. இது ஆறு சக்கரங்களில் ஒவ்வொன்றின் வழியாகச் சென்று உங்கள் மூளையின் லிம்பிக்ப் பகுதியில் நிலைபெறுகிறது. இந்த செயல்முறை ஆன்மீக ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.

சஹஸ்ரார சக்கரம் லிம்பிக் பகுதியில் உள்ள வெற்று இடத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த இடத்தைச் சுற்றி ஆயிரம் நரம்புகள் உள்ளன. தியானத்தின் மூலம் குண்டலினி சக்தி உங்கள் சஹஸ்ரார சக்கரத்தில் நுழையும் போது, ​​இந்த நரம்புகள் அனைத்தும் ஒருமித்த நிலையில் செயல்படத் தொடங்குகின்றன. குண்டலினி சக்தி உங்கள் தலையின் மேல் வழியாக வெளிப்பட்டு பிரபஞ்சத்தின் தெய்வீக ஆற்றலுடன் ஒன்றிணைகிறது.

அனுபவம் மற்றும் நன்மைகள்:
குண்டலினி சக்தி உங்கள் தலையின் மேற்பகுதியில் துளைக்கும்போது (உச்சிக்குழி பகுதி என்றும் அழைக்கப்படுகிறது), அது உங்கள் தனிப்பட்ட விழிப்புணர்வை (ஆத்மா) உலகளாவிய விழிப்புணர்வுடன் (பரமாத்மா) இணைக்கிறது. இது உங்கள் உச்சந் தலையில் ஒரு சக்திவாய்ந்த துடிப்பு உணர்வாக உணரப்படலாம். ஒரு உருகும் உணர்வு மற்றும் குளிர்ச்சியான நுண்ணதிர்வுகள் பெரும்பாலும் இந்த சக்திவாய்ந்த துடிப்புகளைப் பின்தொடர்கின்றன. இந்த அனுபவத்தின் விளைவாக, நீங்கள் உண்மையை நன்கு உணர அனுமதிக்கும் விழிப்புணர்வின் புதிய பரிமாணத்தைப் பெற்றிருப்பீர்கள். நல்லது கெட்டது, சரியிலிருந்து தவறு, உண்மையைப் பொய்யிலிருந்து வேறுபடுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

பிரபஞ்சத்தின் தெய்வீக சக்தியுடன் உங்கள் குண்டலினியின் தொடர்பை நீங்கள் அடைந்தவுடன், நீங்கள் கடந்த கால எண்ணங்களிலோ அல்லது எதிர்கால எண்ணங்களிலோ இனி வாழமாட்டீர்கள். நீங்கள் முன்பு அனுபவித்ததைப் போலல்லாமல் உண்மையான உள் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இந்த கட்டத்தில், உங்கள் மனித விழிப்புணர்வு தெய்வீகத்துடன் ஒன்றுபடும் மற்றும் உங்கள் உடல், அறிவுசார், உணர்ச்சிசார் மற்றும் ஆன்மீக சுயங்கள் ஒன்றாகிவிடும்

நீங்கள் இப்போது சரியான இணக்கத்துடன் செயல்பட முடியும். நீங்கள் இனி குழப்பம் அல்லது முரண்பாட்டை உணர மாட்டீர்கள். நீங்கள் முழுமையான உள் அமைதி மற்றும் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். தார்மீக ரீதியாக என்ன பதில் அல்லது செயல் சரியானது என்பதை நீங்கள் உள்ளுணர்வாக அறிவீர்கள். உங்கள் குண்டலினியின் இணைப்பை அடைவதற்கு முன்பு, கடவுள் என்பவர் நம்முடைய நம்பிக்கை என்று நினைப்பீர்கள். ஆனால் குண்டலினி விழிப்புணர்வுக்கு பிறகு, நீங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத விழிப்புணர்வு நிலைக்குச் செல்வீர்கள், அங்கு நீங்கள் தெய்வீகத்தின் இருப்பைப் பற்றி அறிவீர்கள் மற்றும் உறுதியாக உண்மையாக உணர்வீர்கள் . நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும்போது, ​​இந்த சந்தேகத்திற்கு இடமில்லாத விழிப்புணர்வு இன்னும் வலுவடையும்.

சுய மதிப்பீடு:
உங்கள் சஹஸ்ரார சக்கரம் தடுக்கப்பட்டிருந்தால் அல்லது சமநிலையற்றதாக இருந்தால், பொதுவாக நுண்ணதிர்வுகளை உணருவதில் சிரமம் இருக்கலாம். ஆன்மீக உண்மை அல்லது தெய்வீக இருப்பு பற்றிய சந்தேகங்களையும் நீங்கள் அனுபவிக்கலாம். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் சஹஜ யோகாவில் தியானத்தை எவ்வளவு அதிகமாகப் பயிற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு தெளிவாக உங்கள் சக்கரங்கள் (சக்தி மையங்கள்) மாறும்.
இது இறுதியில் சஹஸ்ராரத்திற்குள் சமநிலைக்கு வழிவகுக்கும். இதற்கு தேவையானது திறந்த மனது மற்றும் உங்கள் தியானத்தை தொடர்ந்து பயிற்சி செய்ய விருப்பம் மட்டுமே. இறுதியில், தெய்வீக சக்தியுடன் உங்கள் குண்டலினியின் தொடர்பை நீங்கள் தொடர்ந்து அடைந்து அனுபவிப்பீர்கள்.

சமநிலையின்மைக்கான காரணங்கள்:
• சுய சந்தேகம்
• நாத்திகத்தின் தீவிர வடிவம்
• எதிலும் தீவிரமாக இருத்தல்

எப்படி சமநிலைப்படுத்துவது:
உங்கள் வலது கையை உங்கள் உச்சந் தலையின் மீது உறுதியாக வைப்பதன் மூலம் உங்கள் சஹஸ்ரார சக்கரத்தை சமநிலைப்படுத்தலாம். "என்னை தியானத்தின் நிலையை அனுபவிக்க அனுமதியுங்கள்." என்று கூறி உங்கள் கையை கடிகார திசையில் மெதுவாக சுழற்றவும்.

ஆரம்பத்தில் நுண்ணதிர்வுகளை உணர முடியாவிட்டால், அது சந்தேகத்திற்கு காரணமாக இருக்க வேண்டாம். சஹஜ யோகா பயிற்சி செய்யும் பலருக்கு நுண்ணதிர்வுகளை அனுபவிப்பதற்கு அல்லது குண்டலினி சக்தியின் சொந்த தொடர்பை நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்துவதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. பொறுமையாக தொடர்ந்துக் பயிற்சிகளை கடைப்பிடிக்கவும். நீங்களும்அந்நிலைக்கு வருவீர்கள். இது உங்கள் சஹஸ்ரார சக்கரத்தை திறந்து வைப்பதற்கும், தடைகள் இல்லாமல் இருப்பதற்கும் முக்கியமான படியாகும்.

SHARE PAGE