நமது ஆன்மீக முன்னேற்றம்
பிப்ரவரி 16, 1991 அன்று இத்தாலியின் சியான்சியானோ டெர்மியில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
அன்று ஒரு நாள் நான் சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன், இந்த ஆத்ம விழிப்புணர்வு - அது எவ்வாறு செய்யப்பட்டது, எப்படி ஆத்மாவை அறிவது, மக்கள் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதை பற்றி இருந்தது.
முதலில் அவர்கள் தங்கள் உடலை எப்படியாவது மறுக்கவோ, எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ கேட்கப்படுகிறார்கள். இப்போது, உடல் சுகமாக இருக்க விரும்புகிறதென்றால், முதலில் படுக்கையில் அல்ல, கம்பளத்தில் தூங்க முயற்சி செய்யுங்கள் என்று கூறப்பட்டது. பின்னர், அது போதாது; கம்பளத்திலிருந்து நீங்கள் பாய் போதுமென்ற மனநிலைக்கு வருகிறீர்கள் - இன்னும் போதாது. அதிலிருந்து ஒருவேளை, நீங்கள் பூமித்தாய்க்கு சென்று, பூமித்தாயின் மீது தூங்கலாம். இன்னும் உடம்பு பக்குவம் அடையவில்லை என்றால் கல்லில் உறங்கத் தொடங்குங்கள். மேலும், இன்னும் இமயமலை வெகு தொலைவில் உள்ளது, ஏனென்றால் சிவன் கைலாசத்தில் வசிக்கிறார். எனவே நீங்கள் இமயமலைக்குச் சென்று பனியில் தூங்குங்கள். இதுவே குறைந்தபட்ச தேவையாக இருந்தது.
பிறகு கூறப்பட்டது - "உனக்கு நல்ல சாப்பாடு பிடிக்கும், ஆடம்பரமான உணவு வேண்டும், நிறைய சாப்பிட விரும்புகிறாய், சரி; எனவே முதலில் நீங்கள் விரும்பும் அனைத்தையும் மறுக்க வேண்டும்". உதாரணமாக, இத்தாலியர்கள் பாஸ்தா சாப்பிட முடியாது. அதை துறக்க வேண்டும். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதன் பிறகு நீங்கள் மிகவும் கசப்பானவற்றை சாப்பிட துவங்க வேண்டியிருக்கும். ஜென் அமைப்பில், குயினைனை விட 108 மடங்கு அதிகமான, போல முற்றிலும் கசப்பான - அல்லது முற்றிலும் இனிப்பு போன்ற ஒன்றை உண்ணும்படி அவர்கள் உங்களுக்கு வழங்குகிறார்கள். அது உங்கள் நாக்கை சோதனைக்கு உட்படுத்தும்.
ஆனாலும் வயிறு இருக்கிறது. எனவே நீங்கள் அதிகமாக சாப்பிட்டால், ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அது போதாது. பிறகு ஏழு நாட்கள் நோன்பு இருங்கள். பிறகு நாற்பது நாட்கள். அதாவது, ஒரு மாதத்திற்கு முப்பது நாட்கள் மட்டுமே உள்ளது; நாற்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் நீங்கள் ஏற்கனவே முடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நிர்வாணத்திற்காக நீங்கள் தவம் செய்ய வேண்டும் என்றால் அப்படித்தான். நீங்கள் முடித்துவிட்டு இறந்துவிட்டதால் நீங்கள் நிர்வாணத்தைப் அடைந்துவிடுவீர்கள்.. உங்களிடமிருந்து எதுவும் எஞ்சியிருக்காது - எலும்புகளைத் தவிர வேறொன்றுமில்லை, இந்த எலும்புகள் பின்னர் நிர்வாணமாகின்றன. இறுதியில் மரணம் பின்தொடர்கிறது, எனவே நீங்கள் முடித்துவிட்டீர்கள் மற்றும் நிர்வாணம் அடைந்து விட்டீர்கள், இதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்படியானால் நீங்கள் ஒரு வீட்டில் வசிக்ககூடாது, ஏனென்றால் வீடு வசதியாக இருக்கிறது. உன் மனைவியை விட்டுவிடு, உன் குழந்தைகளை விட்டுவிடு, அனைவரையும் விட்டுவிடு. இப்போது ஒரு துணியை சுற்றிக் கட்டியிருப்பதைப் போன்ற ஒன்றை மட்டும் அணிந்துகொண்டு, மக்களிடம் சென்று பிச்சை கேட்கவும். இந்த ஆடைகளிலும் இன்னும் சிக்கல் உள்ளது, ஏனென்றால் நீங்கள் உங்கள் துணியுடன் பற்றோடு இருக்கிறீர்கள்.. எனவே, உங்களைப் பார்க்க யாரும் இல்லாத இமயமலைக்குச் சென்று, உங்கள் ஆடைகளை துறந்து, அந்தக் குளிரில் நீங்கள் முற்றிலும் நடுங்கிக் கொண்டே இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் நிர்வாணத்தைப் பெறுவீர்கள். அப்படியே நீங்கள் நிர்வாணத்தைப் பெறுவீர்கள். இது போன்ற நிபந்தனைகள் அனைத்தும் உங்கள் உடலின் தேவைகளை அழிப்பதற்காக போடப்பட்டது. நீங்கள் உங்கள் உடலிடம், "இல்லை, எதுவும் முடியாது. நீ உனது நிர்வாணத்தை ஒழுங்காக செயல்படுத்து" என்று கூறுங்கள்.
எனவே, உங்கள் மூளையால் இனி அதை மறுக்க முடியாது. எனவே, இது முக்கியமானது, குறிப்பாக மேற்கத்திய மக்களுக்கு, இப்போது உங்கள் இதயங்களைத் திறக்கவும், ஏனென்றால் அது இதயத்திலிருந்து தொடங்குகிறது, உங்கள் மூளையிலிருந்து அல்ல.
இரண்டாவது விஷயம், உங்கள் மனதை அழிப்பது, அது உங்களை உணர்வுகளுக்கு, மகிழ்ச்சியான விஷயங்களுக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் சிலவற்றை, மிக அதிகமாக வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதனால் அதை மறுக்கவும், மறுக்கவும். உங்கள் மனம் உங்களுக்குச் சொல்லும் எதையும், அதற்கு "இல்லை, இல்லை, இல்லை" என்று சொல்லுங்கள். சமஸ்கிருதத்தில் ஸ்லோகம் இப்படி இருக்கிறது, "யான் நேதி நேதி வச்சனே, நிகமோ வச்சா" - "நேதி, நேதி" என்று நீங்கள் கூறிக்கொண்டே செல்கிறீர்கள்: "இல்லை, இது இல்லை, இது இல்லை, இது இல்லை, இது இல்லை."
இதை எல்லாம் கடந்த பின்னரே நீங்கள் நிர்வாணத்தைப் பற்றி விவாதிக்கலாம் - விவாதிக்க மட்டுமே, ஆம். அதற்கு முன் நீங்கள் நிர்வாணத்தைப் பற்றி விவாதிக்க கூட தகுதியானவர் அல்ல. நான் இந்தப் புத்தகத்தைப் படித்தபோது, "அப்பப்பா நான் இதையெல்லாம் விட்டு விடுகிறேன், இதெல்லாம் சாத்தியமானது அல்ல" என்றேன்.
சஹஜ யோகா முறையில், கட்டிடத்தின் உச்சியை முதலில் கட்டுவது, பின்னர் அடித்தளம் கட்டுவது போன்றது. உங்களது சஹஸ்ராரத்தை திறந்தது தான் முதல் சாதனை ஆகும்.
பின்னர் சஹஸ்ரார ஒளியில் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். படிப்படியாக தன்னாய்வு செய்தல் ஒரு சிறந்த விஷயம், நுண்ணதிர்வுகளின் மூலம் ஏன் என்று பார்க்க வேண்டும்: எனக்கு இது ஏன் வேண்டும்? என் கவனம் ஏன் என் வசதிகளுக்கு செல்கிறது? என் கவனம் ஏன் உணவில் செல்கிறது, ஏன் என் குடும்பத்தின் மீதும், ஏன் என் குழந்தைகள் மீதும் செல்கிறது? - நான் உயர்ந்ததை அடைய வேண்டியிருக்கும் போது? எனவே உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்யத் தொடங்குங்கள். உங்கள் நுண்ணதிர்வுகளில் உங்களிடமும் ஏதோ தவறு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியவரும். பிறகு நீங்கள் மற்றவர்களைப் பார்த்து மற்றவர்களிடம் என்ன தவறு என்று காண முயற்சிக்கமாட்டீர்கள், உங்களைப் பார்க்கத் தொடங்குங்கள்; ஏனென்றால் இது நீங்கள் அடைய வேண்டிய உங்கள் சொந்த ஆன்மீக உயர்வு ஆகும்.
பழங்காலத்தில், இவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டன. நிர்வாணப் பாதையைத் தொடங்கும் ஒருவர், ஏகாந்தத்திற்குச் சென்று, தனிமையான இடங்களுக்குச் சென்று, மக்களை விட்டு விலகி, அவர்களைத் தவிர்த்து, வேறு எதுவும் செய்யாமல், இந்த ஆன்மீக ஏற்றத்தை, ஆத்ம விழிப்புணர்வை, தனக்காக மட்டுமே அடைந்தார். மற்றவர்களுக்கு இதனால் எந்த பலனும் கிட்டவில்லை.
பின்னர் இந்த மனிதர் முற்றிலும் பிரத்தியேகமானார். அவர் யாருடனும் பேசமாட்டார், யாரையும் சந்திக்க மாட்டார், எங்கோ தொலைதூர மலையின் உச்சியில் அமர்ந்திருப்பார். அவரை யாராவதுச் சந்திக்க முயற்சி செய்தால், அவர் மீது கற்களை எறிவார் அல்லது பயங்கரமான விஷயங்களைச் சொல்வார், அந்த நபரை சந்திக்கவே மாட்டார்.
ஆனால் சஹஜ யோகா என்பது அதைபோன்றது அல்ல. சஹஜ யோகம் என்பது முழுமையின் ஆன்மீக ஏற்றம். இந்த மாதிரியான ஒற்றைச் சாதனைகள் மக்களை எங்கும் அழைத்துச் செல்லவில்லை. துறவிகள் மக்களிடம் பேச முயன்றனர் - ஆத்ம விழிப்புணர்வைப் பற்றி, கடவுளைப் பற்றி, நீதியைப் பற்றி, மதிப்பு அமைப்பு பற்றி அவர்களிடம் சொல்ல முயன்றனர்; ஆனால் அவர்களும் விசித்திரமானவர்களாக கருதப்பட்டனர், மேலும் சித்திரவதை மற்றும் தொந்தரவு செய்யப்பட்டனர்.
தனிமனித உயர்வைப் பொறுத்த வரை, சஹஜ யோகம் வரும் வரை அவர்களால் அதைப் பற்றி பேசுவதையும், கூறுவதையும் தவிர மற்றவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதைப் பற்றி பேசக்கூட தடை விதிக்கப்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இதைப் பற்றி யாரும் மக்களிடம் பேசவில்லை. இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்தன, மிகவும் கடினமான சமஸ்கிருத புத்தகங்கள் சில ஆர்வலர்களுக்கு மட்டுமே கிடைத்தன. மிக மிக சிலருக்கு கூட, சில எண்ணிக்கையிலான நபர்களுக்கு விளக்கப்பட்டது. ஆனால் ஆத்ம விழிப்புணர்வு மறுக்கப்பட்டது.

எனவே ஒரு குருவுக்கு ஒரு சீடர் மட்டுமே இருந்தார், எல்லாமே தனிப்பட்ட ஏற்றம், தனிப்பட்ட உழைப்பாக இருந்தது. அப்படிப்பட்ட சீடன் மற்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, இரகசியமாக வைக்கப்பட்டு, அவருக்குச் செயல்பட்டார்; மேலும் அவர் பாடலாம், கவிதைகள் எழுதலாம், அதைப் பற்றி பேசலாம், அவருடைய மகிழ்ச்சி என்னவென்று சொல்லலாம், ஆனால் யாருக்கும் ஆத்ம விழிப்புணர்வு அளிக்க அவருக்கு உரிமை இல்லை, ஆத்ம விழிப்புணர்வு கொடுக்க அவருக்குத் தெரியாது.
எனவே நீங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள் என்பதை இப்போது பார்க்கிறீர்கள். அதிகம் எதையும் துறக்காமல் உங்களின் ஆத்ம விழிப்புணர்வு உங்களுக்கு கிடைத்துள்ளது. நீங்கள் மிகவும் பரந்த அளவில் வேலை செய்ய முடியும், நீங்கள் மற்றவர்களுக்கு ஆத்ம விழிப்புணர்வு கொடுக்க முடியும். சஹஜ யோகத்தைப் பற்றிய அனைத்து நுட்பமான அறிவையும் நீங்கள் அறிவீர்கள்.
உதாரணத்திற்கு கூற வேண்டுமானால், சங்கராச்சாரியார் விவேக சூடாமணி என்று ஒரு அழகான கட்டுரையை எழுதினார், அங்கு அவர் கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்கினார். "விவேக" என்றால் மனசாட்சி. விழிப்புணர்வு மற்றும் அதைப்போன்றவற்றை அவர் விவரித்துள்ளார். ஆனால் சர்மா என்று ஒரு மனிதர் இருந்தார், சரியான புரிதல் இல்லாமல் அவருடன் வாதிடத் தொடங்கினார், சங்கராச்சாரியார் சலிப்படைந்தார். அவர்களுடன் பேசி பயனில்லை என்றார்.
அதனால் தான் ஸௌந்தர்ய லஹரியை எழுதினார். ஸௌந்தர்ய லஹரி என்பது அன்னையைத் துதிக்கும் அனைத்து மந்திரங்களையும் தவிர வேறில்லை. அவர், "ஏன், எனக்கு அன்னையை தெரியும், இப்போது நான் அவளைப் பாராட்ட போகிறேன். முடியாது - இவர்களிடம் பேசி பயனில்லை! முட்டாள்தனமானவர்கள். அவர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்?" "இந்த மக்களுக்கு அந்தத் திறனும் இல்லை, எனக்குத் தெரிந்ததைப் புரிந்துகொள்ளும் அந்த உணர்திறன் இல்லை" என்பதை அவர் உணர்ந்தார்.

கடவுள் என்றால் என்ன என்பதை அறிவதே உண்மையான அறிவு. அது கடவுள் என்றால், நீங்கள் எப்படி எதையும் சந்தேகிக்க முடியும், எப்படி எதையும் பகுப்பாய்வு செய்ய முயற்சி செய்யலாம்? அது கடவுள். எல்லாம் வல்ல கடவுள், எல்லாவற்றையும் அறிந்தவர், எல்லாவற்றையும் செய்பவர், எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்.
அதைத்தான் ஞானம், அறிவு, உண்மையான அறிவு, தூய அறிவு என்று சொல்ல வேண்டும். இது சக்கரங்களைப் பற்றிய அறிவு அல்ல, நுண்ணதிர்வுகளின் அறிவு அல்ல, குண்டலினியின் அறிவு அல்ல, ஆனால் எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிய அறிவு. மேலும் சர்வவல்லமையுள்ள கடவுளின் அறிவு மனதளவில் உள்ளது அல்ல.
மீண்டும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இது உங்கள் இதயத்திலிருந்து தொடங்கி உங்கள் மூளைக்குச் செல்கிறது, இது உங்கள் மகிழ்ச்சியின் அனுபவத்திலிருந்து வெளிவந்து உங்கள் மூளையை அடைகிறது. எனவே உங்கள் மூளை அதை மறுக்க முடியாது.
உதாரணமாக, சில சமயங்களில் உங்கள் அன்னை, சிறிய அன்னை இருக்கும் போது, அம்மாவின் பாசம் தெரியும். ஆனால் உங்களால் விளக்க முடியாது, அது உங்கள் இதயத்திலிருந்து வருகிறது, "இல்லை, அது என் அம்மா, அவள் அப்படி செய்ய மாட்டாள், என் அம்மாவை எனக்கு நன்றாகத் தெரியும்" என்று நீங்கள் கூறுகிறீர்கள். உன்னைப் பெற்றெடுத்த உன் தாயைப் பற்றிய அறிவு; அவ்வாறு இல்லாமல் இருக்கலாம், அன்னை நல்லவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கடவுளைப் பற்றிய அறிவு, அதாவது அவரே அன்பு, அவரே உண்மை, அவரே அனைத்தையும் அறிந்தவர் என்பது உங்கள் இருப்பின் ஒரு அங்கமாகவும் பகுதியாகவும் மாறும், அதுவே நிர்வாணம் ஆகும்.
எனவே இது முக்கியமானது, குறிப்பாக மேற்கத்திய மக்களுக்கு, இப்போது உங்கள் இதயங்களைத் திறக்கவும், ஏனென்றால் அது இதயத்திலிருந்து தொடங்குகிறது, உங்கள் மூளையிலிருந்து அல்ல.