நாடிகள் மற்றும் மூன்று மனநிலைகள்

நாடிகள் மற்றும் மூன்று மனநிலைகள்

சமநிலையை அடைதல்

இந்த நுட்பமான நாடிகளை நீங்கள் பார்க்க முடியாது. அவை சஹஜ யோகத்தில் மட்டுமே வெளிப்பட முடியும்.

மனித நுட்பமான அமைப்பானது, உடல் முழுவதும் நுட்பமான சக்தியின் ஓட்டத்தை செயல்படுத்தும் ஆயிரக்கணக்கான நாடிகளால் ஆனது. அது மிகவும் சிக்கலான ஒன்றாகும். நுட்பமான அமைப்புக்குள் குறிப்பிட்ட இடங்களில் இந்த நாடிகள் வழியாகப் பாயும் நுட்பமான சக்திகளின் வெளிப்பாடுகள் "சக்கரங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. நமது முழு நுட்பமான அமைப்பும் சமஸ்கிருதத்தில் "நாடிகள்" என்று அழைக்கப்படும் மூன்று முதன்மை செங்குத்து சக்தி நாடிகளால் நிர்வகிக்கப்படுகிறது, அவை ஏழு முக்கிய சக்கரங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன.

குண்டலினியின் விழிப்பு மூலம் ஆத்ம விழிப்புணர்வு அடையும் போது மூலம் மட்டுமே, நமது நுட்பமான அமைப்பு முழுமையாக செயல்படுத்தப்படுகிறது - இது முழு நுட்பமான அமைப்பையும் சுத்திகரித்து சமநிலைப்படுத்துகிறது மற்றும் நமக்குள் இருக்கும் சக்கரங்களின் தூய்மையான குணங்களை அறிவூட்டுகிறது.

ta-All Nadis-01

நமது அன்றாட வாழ்வில், நாம் நமது விருப்பங்களையும் உணர்வுகளையும் ஆளும் இடது நாடியையும் (சமஸ்கிருதத்தில் இடா நாடி) அல்லது நமது எண்ணங்களையும் செயல்களையும் நிர்வகிக்கும் வலது நாடியையும் (சமஸ்கிருதத்தில் பிங்கலா நாடி) பயன்படுத்துகிறோம். நமது வாழ்க்கை முறையில் இந்த இரண்டு நாடிகளில் அதிகப்படியான சஞ்சாரத்தால் பெரும்பாலும் நமது நாடிகளில் இயற்கையான சமநிலையை சீர்குலைப்பதோடு, உடல், மனம் மற்றும் உணர்ச்சி சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இடது மற்றும் வலது நாடிகளுக்கு நடுவில் அமைந்துள்ள 3வது சக்தி நாடி சுஷும்னா நாடி ஆகும். அது நமது ஆத்ம விழிப்புணர்வால்(மட்டுமே சாத்தியமான) குண்டலினி சக்தியை உயர்த்தி, நமது நாடிகளையும் சக்கரங்களையும் ஒளிரச் செய்து நம்மை உள் சமநிலைக்கு அழைத்துச் செல்கிறது.

இந்த நுட்பமான நாடிகள் நமது முதுகுத் தண்டுவடத்தில் சிம்பதெடிக் மற்றும் பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலமாக வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், நம் உடலில் உள்ள நமது கைகள் மற்றும் கால்களில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்கும் ஒத்திருக்கிறது.

ஸ்ரீ மாதாஜி வரைந்த அசல் ஓவியம்
ஸ்ரீ மாதாஜி வரைந்த அசல் ஓவியம்

ஆத்ம விழிப்புணர்வுக்குப் பிறகு, நமது நாடிகள் மற்றும் சக்கரங்களுக்குள் உள்ள தொந்தரவுகளை நாம் தெளிவாக அறிவோம். அவற்றை நமது உடலின் முதுகெலும்பு அல்லது உடல் உறுப்புகளின் அந்தந்த நிலைகளுக்கு ஒத்திருக்கும் இடங்களில் வெப்பமாகவோ, கடுமையான குளிராகவோ அல்லது உணர்வின்மையாகவோ உணர்கிறோம்.

ஸ்ரீ மாதாஜி பல்வேறு சுத்திகரிப்பு நுட்பங்களை விரிவாக விவரித்துள்ளார். அவை பெரும்பாலும் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் போன்ற ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி, நாடிகள் மற்றும் சக்கரங்களில் உள்ள சில தொந்தரவுகளை நீக்கி, அவற்றை இயற்கையான சமநிலைக்குக் கொண்டு வருகின்றன.

இந்த பகுதியை ஆராயுங்கள்

SHARE PAGE