ஆக்ஞா சக்கரம்

ஆக்ஞா சக்கரம்

மன்னிக்கும் சக்தி

இந்த சக்கரத்தின் சாராம்சம் மன்னிக்கும் மனநிலை. நாம் மன்னிக்காதபோது, ​​​​இந்த சக்கரத்தை சமநிலையிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். மன்னிப்பு என்பது கோபம், வெறுப்பு மற்றும் மனக்கசப்பைக் கைவிடும் சக்தி, இது ஆத்ம விழிப்புணர்வுக்கு முன் எளிதானது அல்ல. நமது மனமார இதயத்திலிருந்து "நான் மன்னிக்கிறேன்" என்று கூறினாலே, நமது குண்டலினி இந்த மையத்தை ஊடுருவி, தெய்வீக அமைதியின் மண்டலத்தில் நம் கவனத்தை செலுத்தி , நம்மை தியானத்தில் சிந்தனையற்ற விழிப்புணர்வு நிலையில் எளிதில் நிலைக்க வைக்கிறது

மன்னிக்கும் சக்தியின் மூலம், நமது ஆத்மாவின் உயர்ந்த தன்மையை - பணிவு, உயர் பண்பு, பெருந்தன்மை மற்றும் அனைவரிடத்திலும் முடிவில்லாத அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றைக் காண்கிறோம். தியானத்தின் மூலம், ஆக்ஞா சக்கரத்தின் வளர்ச்சியானது நமது அகங்காரம், கட்டுப்பாடு, பழக்கவழக்கங்கள், இனவெறி, தவறான எண்ணங்கள் மற்றும் நமது தவறான அடையாளங்கள் அனைத்தையும் கரைக்கிறது. மிகவும் தூய்மையான ஆன்மீக சாம்ராஜ்யத்தை குறிக்கும் இறுதி இலக்கும் ஏழாவது மையமுமான சஹஸ்ரார சக்கரத்தை நமது விழிப்புணர்வு அடைவதற்கான வழியைத் திறக்கும் குறுகிய வாயிலே ஆக்ஞா சக்கரம் என்று வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

இடம்:
ஆக்ஞா சக்கரம் நமது மூளையில் தோராயமாக நமது நெற்றியின் மையத்தில் நமது பார்வை நரம்பு இழைகளின் சந்திப்பில் (மருத்துவத்துறை சொற்களில் ஆப்டிக் சியாஸ்மா என்று அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளது. ஆக்ஞா சக்கரத்தின் நுண்ணதிர்வுகளை இரண்டு கைகளிலும் உள்ள மோதிர விரல்களில் உணர முடியும்.

நிறம்:
வெள்ளி நிறம் ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கிறது. இந்த சக்கரம் ஒளியின் சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஞா சக்கரத்தின் குணங்கள் பின்வருமாறு:
• மன்னிப்பு
• இரக்கம்
• பணிவு
• சிந்தனையற்ற விழிப்புணர்வு
• அகங்காரம் மற்றும் மமகாரம்

ta-6-Agnya-01

ஆக்ஞாவின் முதன்மையான குணம் மன்னிப்பதாகும். இந்த சக்கரத்தின் விழிப்புணர்வின் மூலம் மற்றவர்களை மன்னிக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறோம், மேலும் மனித குறைபாடுகளுக்கு நம்மையும் மன்னிக்கிறோம். ஆக்ஞா சக்கரம் "மூன்றாவது கண்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த மூன்றாவது கண் என்பது பல யோக பயிற்சியாளர்கள் கூறுவது போல் ஆழ்ந்த உருவங்களைப் பார்ப்பது அல்லது கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறன்களை வளர்ப்பது அல்ல, ஆனால் இது நமது மன மற்றும் உணர்ச்சி சார்புகளின் மூலம் நாம் முக்கியமாகப் பழகிய கோணத்தை மாற்றுவதாகும். மன அழுத்தமாக, அடிக்கடி சலிப்பாக அல்லது அர்த்தமில்லாமல் இருந்த அதே வாழ்க்கை, நம் பிறப்பின் உண்மையான நோக்கத்தை உணரும்போது, ​​ஆத்ம விழிப்புணர்வு மற்றும் ஆக்ஞா சக்கரத்தின் திறப்புக்குப் பிறகு மகிழ்ச்சி, அன்பு மற்றும் இரக்கம் நிறைந்ததாக மாறும். செல்வமோ, பற்றாக்குறையோ நம்மை உயர்த்தவோ அல்லது ஏமாற்றவோ முடியாது, ஏனெனில் நாம் நமது ஆன்மீக தன்மையின் யதார்த்தத்தில் வசதியாக நிலைப்போம். கௌதம புத்தர் ஞானமடைந்த பிறகு தனது அரண்மனையின் வசதிக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை ஏன் ஒருபோதும் உணரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, இந்த உயர்ந்த நிலையை அடைவது நமக்கு உதவுகிறது.

அனுபவம் மற்றும் நன்மைகள்:
உங்கள் ஆக்ஞா சக்கரம் உங்கள் பார்வை, செவிப்புலன் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் கபச் (பிட்யூட்டரி) சுரப்பியையும் கட்டுப்படுத்துகிறது. "மாஸ்டர் சுரப்பி" என்றும் அழைக்கப்படும் இந்த அத்தியாவசிய சுரப்பி, மற்ற அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் சீரமைக்கிறது. மேலும் உங்கள் வளர்ச்சி, உடலியல் முதிர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் தூக்கத்தை கவனித்துக் கொள்கிறது. நம்மில் பலர் நம் வேலையின் ஒரு பகுதியாக கணினியில் நீண்ட நேரம் செலவிடுகிறோம். தொலைக்காட்சி முன்னும் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம். அதிகப்படியான காட்சி தூண்டுதல் ஆக்ஞா சக்கரத்தை பலவீனப்படுத்தும். அதிர்ஷ்டவசமாக, சஹஜ யோகா தியானப் பயிற்சி இந்த பிரச்சனையை குறைக்கும். உங்கள் அகங்காரம் மற்றும் மமகாரம், ஆக்ஞா சக்கரத்தில் ஒன்று சேர்கின்றன. உங்கள் நினைவுகள், அனுபவங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் உணர்ச்சிகளை வைத்திருக்கும் உங்கள் மூளையின் மமகார பகுதியுடன் உங்கள் இடது ஆக்ஞா இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் வலது ஆக்ஞா உங்கள் மூளையின் அகங்கார பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது சிந்தனை, திட்டமிடல் மற்றும் செயல் மூலம் எதிர்காலத்தில் கவனத்தை செலுத்துகிறது. உங்கள் அகங்காரம் மற்றும் மமகாரம் ஆக்ஞா சக்கரத்தில் குறுக்கே வெட்டுகின்றன.

உங்கள் இடது ஆக்ஞா அதிகமாக செயல்பட்டால் , உங்கள் மமகாரம் பலூன் போல வீங்கக்கூடும். கடந்த காலத்தில் கவனம் செலுத்தும் அனைத்தும் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட குணம் மற்றும் சுய-தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அல்லது நடத்தைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதேபோல், உங்கள் வலது ஆக்ஞா அதிகமாக செயல்பட்டால் ,உங்களது அகங்காரம் அதிகப்படியான சிந்தனை மற்றும் திட்டமிடல் அனைத்தையும் அதிகரிக்கும். இது கிளர்ச்சி, அடிக்கடி நிதானத்தை இழப்பது மற்றும் மற்றவர்களிடம் ஆக்ரோஷமான நடத்தைக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்டவசமாக, ஆக்ஞா சக்கரத்தை குண்டலினி ஆற்றலால் நிரப்புவது இந்த பலூன்களை சமநிலைப்படுத்துவதற்கும், உள்ளடக்கிய காற்றை வெளியேற்றம் செய்வதற்கும் மிகவும் பயனுள்ள வழியாகும். தியானத்தில் இருந்து வரும் மன அமைதி நம் அனைவருக்கும் பணிவை விதைக்கிறது. மனத்தாழ்மையின் மூலம், மன்னிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்கிறோம். மன்னிப்பு என்பது ஏற்றுக்கொள்வதும் குணப்படுத்துவதும் ஆகும். இது கோபம், வெறுப்பு மற்றும் மனக்கசப்பு போன்ற எதிர்மறையான பிணைப்புகளிலிருந்து உங்களை விடுவிக்கிறது. மன்னிப்பதில், நீங்கள் ஒரு மிகப்பெரிய அமைதி மற்றும் நிம்மதியை அனுபவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சுயமதிப்பீடு:

உங்கள் ஆக்ஞா சக்கரம் அடைப்பட்டால், உங்களையோ அல்லது மற்றவர்களையோ மன்னிக்க இயலாமல் இருக்கலாம். நீங்கள் கடந்த காலத்தை நினைத்து கொண்டே இருப்பதையோ அல்லது சுயபச்சாதாபத்தில் ஆழ்ந்திருப்பதையோ காணலாம். அகங்காரம் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவை ஆக்ஞாயாவின் சமநிலையின்மையின் மற்ற அறிகுறிகளாகும், அத்துடன் ஆபாசப் படங்கள் அல்லது கவனத்தை சிதறடிக்கும் பாலியல் கற்பனைகள் மீதான ஆவேசம். கவலை, அதிகப்படியான சிந்தனை மற்றும் அதிகப்படியான திட்டமிடல் ஆகியவை ஆக்ஞா சக்கரத்தின் அடைப்பைக் குறிக்கலாம்.

சமநிலையின்மைக்கான காரணங்கள்:

  • விடாப்பிடியான கருத்துக்கள்.
  • நிலையான நடத்தை அமைப்புகள்.
  • நமது செயல்களில் உச்சத்திற்குச் செல்வது.

எப்படி சமநிலைப்படுத்துவது:

உங்கள் ஆக்ஞா சக்ரத்தை சமநிலைப்படுத்த, உங்கள் தியானப் பயிற்சியை இயற்கையான அமைப்பில் பயிற்சி செய்யுங்கள். வானத்தைப் பார்த்துக்கொண்டு வெளியில் தியானம் செய்ய முயற்சிக்கவும். உங்கள் வலது கையை உங்கள் நெற்றியில் வைத்து, உங்கள் தலையை சிறிது தாழ்த்தி, "நான் உட்பட அனைவரையும் மன்னிக்கிறேன்" என்று சொல்லலாம். உங்கள் மன்னிப்பை உங்கள் இதயத்திலிருந்து வெளிப்படுத்த முயற்சிக்கவும்.

உங்கள் ஆக்ஞா சக்கரத்தை சமநிலையில் வைத்திருப்பதற்கான சிறந்த வழி, அதிகப்படியான சிந்தனை மற்றும் திட்டமிடலைத் தவிர்ப்பதாகும். நிகழ்காலத்தில் வாழுங்கள் - ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கவும்!

SHARE PAGE