அறிவூட்டும் எதிர்கொள்ளல்
அவருடைய அளவிட முடியாத பச்சாதாபம் மற்றும் மனிதநேயத்தின் மீதான அன்பும்
இங்கிலாந்தில் ஒரு பத்திரிகையாளர் ஒருமுறை, "உங்களுக்கு ஏதேனும் ஏமாற்றம் உண்டா?" என்று கேட்டபோது, ஸ்ரீ மாதாஜி "எனக்கு எந்த நியமனங்களும் இல்லை அல்லது ஏமாற்றங்களும் இல்லை!" என்று பதிலளித்தார். தொடர்ந்து வந்த சிரிப்பு ஸ்ரீ மாதாஜியுடனான பல உரையாடல்களை வகைப்படுத்தியது, இது நகைச்சுவையாகவும், அசாதாரணமாகவும், அடிக்கடி ஆச்சரியமான திருப்பமாகவும் இருந்தது.
சில தலைப்புகளுக்கு இடையில் பெரும்பாலான மக்கள் இதற்கு முன் பார்த்திராத தொடர்புகளை வெளிப்படுத்தும் திறனை ஸ்ரீ மாதாஜிக் கொண்டிருந்தார். இது அவரது உரைகளையும், கதைகளையும் ஈர்க்கக்கூடியதாகவும், கவரும் வகையிலும் மற்றும் மறக்கமுடியாததாகவும் மாற்றியது. ஸ்ரீ மாதாஜி இதுபோன்ற ஆயிரக்கணக்கான உரைகளை எப்போதும் ஊடுருவும் வகையிலும், அறிவூட்டுவதாகவும் வழங்கியுள்ளார். அவரது நீட்டிக்கப்பட்ட கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) கிட்டத்தட்ட ஒரு அங்குல தடிமனாக இருந்தது, மேலும் முடிந்தவரை பலரைச் சென்றடைந்து ஆத்ம விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்ற ஒரு நீடித்த நோக்கத்துடன் அவர் உலகத்தை சுற்றியபோது அவர் பார்வையிட்ட பல இடங்களின் முத்திரையைப் பதித்திருந்தது.
அவர் உண்மையில் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்தார், ஆனால் சுருக்கமான வணக்கம் மற்றும் விடைபெறும் அளவில் அல்ல. உலக ஞானியாக இருந்தாலும் சரி, சாதனை படைத்தவராக இருந்தாலும் சரி அல்லது ஒரு பணிவான கிராமவாசியாக இருந்தாலும் சரி, ஸ்ரீ மாதாஜி ஒரு நபரின் இருப்பை ஆழமாக ஆராய்ந்தார், ஏனென்றால் அவருக்கு எல்லோரும் முக்கியம், அனைவரும் ஆற்றல் உள்ளவர்கள்.
இந்தத் திறன்தான் ஸ்ரீ மாதாஜியின் வேலையைச் செய்யத் தூண்டியது. ஆத்மாவாக மாறுவதற்கும், இணைக்கப்படுவதற்கும், ஆத்ம விழிப்புணர்வை அடைவதற்கும் ஒவ்வொருவருக்கும் திறன் இருந்தது. சிலர் ஸ்ரீ மாதாஜியை அங்கீகரித்தார்கள், சிலர் அறியவில்லை. இது அவர் யார் என்பதை விட இது ஒரு தனிநபரின் நிலை மற்றும் அவர்கள் தங்களுக்குள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமைந்தது.
சிலர் அவரைப் பார்த்தார்கள், உணர்ந்தார்கள், நெருங்கினார்கள், மற்றவர்கள் திரும்பி விட்டனர்.
ஸ்ரீ மாதாஜி யார்? ஸ்ரீ மாதாஜி என்றால் என்ன? ஸ்ரீ மாதாஜி ஒரு குரு. மேலும் குரு என்றால் என்ன? - குரு என்ற வார்த்தைக்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது: கு = அறியாமை. ரு = நீக்குபவர். எனவே ஒரு குருவானவர் மனித நிலையில் சூழ்ந்துள்ள ஆன்மீக அறியாமை மற்றும் மாயையை அகற்றக் கூடியவராக இருக்க வேண்டும்.
நெருங்கி வருபவர்களுக்கு, ஸ்ரீ மாதாஜி உண்மையான மேற்கொள், முழுமையான தொகுப்பு, பூமியின் அச்சு என்று பலர் உணர்ந்தனர். ஒரு தெய்வீக தாய். எப்படியோ, அவருக்கு ஒரு திறமை இருந்தது, மக்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளை தாங்களே தீர்த்து கொள்ள உதவும் அளவிற்கு ஒரு உள்ளார்ந்த திறன் இருந்தது. அவருடைய வித்தை, ஒரு அன்பான தோட்டக்காரன் விதைகளை விதைத்து முளைப்பதைப் போல ஒரு தனிநபர் பூத்துக் காய்க்கும் அளவிற்கு பலனை தந்தது.
“ஞானம் ஒளிமயமானது, மங்காதது
மேலும் அவரை நேசிப்பவர்களால் அவர் எளிதில் கண்டறியப்படுகிறார்.
மற்றும் அவரைத் தேடுபவர்களால் அவர் கண்டுபிடிக்கப்படுகிறார்.
தன்னை விரும்புபவர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்த அவர் விரைகிறார்.
… அவர் தனக்குத் தகுதியானவர்களைத் தேடிச் செல்கிறார்.
அவர்களுடைய பாதைகளில் அவர் கருணையுடன் அவர்களுக்குத் தோன்றுகிறார்.
சாலொமோனின் ஞானம் அதி. 6 v12-17"
இருப்பினும் அவருடைய செய்தி உறுதியானது: 'உனது சொந்த குருவாக ஆகு, ஆத்மாவாக மாறு', அது சில சமயங்களில் கொஞ்சம் கடினமாக இருந்தது. அதற்கு உறுதியும் ஒழுக்கமும் தேவைப்பட்டது.
ஒரு பலவீனமான மற்றும் சிதறிய கவனம், குழப்பம், சோம்பேறித்தனம், குறைந்த சுயமரியாதை மற்றும் எண்ணற்ற பிற பிரச்சனைகள் ஒவ்வொரு நபரின் திறனையும், தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதற்குமான, தங்கள் திறனை முழுமையாக உணர்ந்து கொள்வதற்குமான உறுதிப்பாட்டைத் தடுக்கும்.
இந்த செயல்பாட்டில், ஒரு குருவாக, ஸ்ரீ மாதாஜி ஒரு புலியைப் போல கடுமையானவராகவும், பார்ப்பதற்கு அற்புதமானவராகவும், இருப்பினும் ஒரு தாயாக மென்மையாகவும், பொறுமையாகவும், ஆறுதலளிப்பவராகவும் இருக்க முடிந்தது. ஒரு தாய்மைக்குண்டான வழியில் அவர் தனிநபர்களை ஊக்குவிக்கவும் உயர்த்தவும் முயற்சித்தார்; அவர்கள் தத்தளிப்பதை அவர் பார்த்தபோது, அவர் கை நீட்டி அவர்களை மீண்டும் அவர்களின் பாதையில் வழிநடத்தத் தயாராக இருந்தார்.
நீங்கள் அவருடைய கவனத்தில் இருந்தபோது, நீங்கள் பரிணாமத்தின் கைகளில் இருப்பது போல் உணர்வீர்கள். அவரது புன்னகை ஆறுதலாகவும் மீட்கவும் செயல்படும். அவருடைய குரல் உதவியையும் ஆலோசனையையும் வழங்கும். அவருடைய வார்த்தைகளுக்கு செவிசாய்க்கலாமா வேண்டாமா என்ற தேர்வு எப்போதும் தனிநபரின் இதயத்தில் இருந்தது. வெவ்வேறு அளவிலான புரிதலுடன், ஒவ்வொருவரும் ஸ்ரீ மாதாஜியை தனிப்பட்ட முறையில் அறிந்தனர்.
மக்களை அவர் மிக நளினமாக கையாளும் விதம் அபாரமானது. ஒரு சூழ்நிலையில் அவர் தனது கவனத்தை ஊடுருவி, மற்றவர்கள் சொல்வதையும், சொல்லப்படாததையும் கேட்டு மென்கத்தி போன்ற துல்லியத்துடன் அவரால் விரைவாக அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இசைந்து கொடுக்க முடியும்.
அவரது சிரிப்பு தொற்றக்கூடியதாக இருந்தது, அவரது சாட்சியாக பார்க்கும் சக்தி அற்புதமானது, மேலும் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை அவர் அனுபவித்து அதிலிருந்து விடுதலை அடைவார். ஸ்ரீ மாதாஜியைப் பற்றிய மக்களின் நினைவுகள் அனைத்தும் ஒரே உணர்வை எதிரொலிக்கின்றன; பாக்கியம், நல்ல அதிர்ஷ்டம் அல்லது தெய்வீக அதிர்ஷ்டம் எப்படியோ, அவர்கள் ஸ்ரீ மாதாஜி மற்றும் அவரது போதனைகளைக் கண்டார்கள்.
ஸ்ரீ மாதாஜியின் நுண்ணறிவு மற்றும் ஞானத்தின் செய்தி நிலையானது மற்றும் ஒரே மாதிரியானது, அவர் கூறியது போல்:
"சத்தியத்தை தேடும் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்"
"நீங்கள் ஒரு ஆத்மா ஆவீர்கள்"
"உங்களுக்குள் ஒரு சக்தி இருக்கிறது"
"உங்கள் சொந்த குருவாகுங்கள்"
"ஆனந்தமாக இருங்கள்"
"உங்கள் ஆத்ம விழிப்புணர்வை நீங்கள் அடையலாம். உங்கள் உள்ளங்கைகளிலும் உங்கள் தலைக்கு மேலேயும் குளிர்ந்த காற்று வீசுவதை நீங்கள் உணரலாம்".
அடிப்படையான செய்தி ஒருபோதும் மாறவில்லை. ஒரே கேள்வி என்னவென்றால், எத்தனை பேர் அந்த செய்தியைக் கேட்டு, தங்களது உண்மையான சுயத்தைக் கண்டறியும் வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள்?
ஸ்ரீ மாதாஜியின் செய்தியைக் கேட்டு, அவரது பரிசை மனதார ஏற்றுக்கொண்டு, சஹஜ யோகாவை ஆனந்தமாகப் பரப்பியவர்களிடையே அவரது மரபு நிலைத்திருக்கிறது.
அவருடைய சாராம்சம் நம் கைகளிலும் தலைக்கு மேலேயும் வீசும் குளிர்ந்த காற்றில் உணரப்படுகிறது. அவருடைய அருள் நம் இதயங்களை மெதுவாக மென்மையாக்குகிறது, மேலும் தெய்வீக அன்பு நம் வாழ்வின் மூலம் எதிரொலிக்கிறது.