சுஷும்னா நாடி
சமநிலை மற்றும் பரிணாமம்
நமது மத்திய சக்தி நாடி (சமஸ்கிருதத்தில் சுஷும்னா நாடி) மத்திய பாதை என்றும் அழைக்கப்படுகிறது. இது நமது முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ள புனித எலும்பிலிருந்து உருவாகிறது (நமது குண்டலினி சக்தி அங்கு அமைந்துள்ளது) மற்றும் தலையின் மேல் சஹஸ்ரார சக்கரத்துடன் இணைகிறது.
நமது மைய சக்தி நாடி நமது ஆன்மீக வளர்ச்சியை ஆதரிக்கிறது. ஆத்ம விழிப்புணர்வு பெற்ற ஆன்மாக்கள் மற்றும் நேர்மையான பாதையைப் பின்பற்றுபவர்கள் மற்றும் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களிடமும் இந்த நாடி மிகவும் வளர்ந்திருக்கிறது. ஆத்ம விழிப்புணர்வுக்குப் பிறகு சுஷும்னா நாடியை செயல்படுத்துவது நம் விழிப்புணர்வில் சத்வ குணத்தின் (நீதியின் மனநிலை) அழகான குணங்களை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் நுட்பமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் தொடர்ந்து உள் பரிணாமம் பெற உதவுகிறது.
நமது முழு நுட்பமான அமைப்பும் சஹஸ்ரார சக்கரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, இது நமது ஆன்மீக வளர்ச்சிக்கும் தியானத்திற்கும் மிக முக்கியமான சக்கரம். இது நமது குண்டலினி விழிப்புணர்வின் உயர் நிலைகளை வெளிப்படுத்தும் மிகப்பெரிய திறனைக் கொண்ட சக்கரம் ஆகும். மத்திய சக்தி நாடியில் உள்ள தடைகளை நீக்குவது சஹஜ யோகா தியானத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். நமது மத்திய நாடி தெளிவாக இருக்கும் போது, சமநிலையை பராமரிப்பது எளிது. இது, சஹஸ்ரார சக்கரத்திற்கு நமது குண்டலினி சீராக உயர வழி வகுக்கிறது. இது நிகழும்போது, நம்முடைய சொந்த தெய்வீக சக்தியான குண்டலினி, பண்டைய ஆன்மீக மரபுகளில் பல பெயர்களால் அறியப்பட்டு மற்றும் ஸ்ரீ மாதாஜி, பரமசைதன்யா என்று அழைத்த எங்கும் நிறைத்த தெய்வீக சக்தியுடன் ஒன்றிணைகிறது. அனைத்து சக்கரங்கள் மற்றும் நாடிகளின் நுட்பமான சக்தி சமநிலையை பராமரிக்க சுஷும்னா நாடியின் சரியான செயல்பாடு முக்கியமானது.
எல்லாம் மிகவும் சிக்கலானதாகத் தோன்றினாலும், ஸ்ரீ மாதாஜி "யோக சாஸ்திரம்" (சமஸ்கிருதத்தில் ஒரு ஒழுக்கம் பற்றிய அறிவு என்று பொருள்) என்பதை எளிய மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையான ஒப்புமைகளைப் பயன்படுத்தினார். சுருக்கமாக அவற்றைப் பின்வரும் வழியில் நாம் சிந்திக்கலாம். நாம் வாழும் போதும் மற்றும் நம் வாழ்க்கையை அனுபவிக்கும் போதும் நமது உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் செயல்களை சமநிலைப்படுத்த நமது இடது மற்றும் வலது சக்தி நாடிகளைப் பயன்படுத்த விரும்புகிறோம். ஆனால் ஒரு சமநிலையான மற்றும் திருப்தியான வாழ்க்கை, பூமியில் நமது இருப்பின் முக்கிய நோக்கத்தின் மீது கவனம் செலுத்துவதற்கும் நமது நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. அதனால் நமது மிக உயர்ந்த ஆன்மீக ஆற்றலும் பரிணாமம் பெறுகிறது. இவ்வாறு, மூன்று நாடிகளையும் சமநிலையாகவும் தெளிவாகவும் வைத்திருப்பது நம் வாழ்க்கையையும் அதன் அனைத்து சவால்களையும் எளிதாக நிர்வகிக்கும் சக்தியை நமக்கு வழங்கும். மேலும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் சமநிலையான மற்றும் அர்த்தமுள்ள விதத்தில் மகிழ்ந்து அனுபவிப்போம்.