ஸ்ரீ மாதாஜியின் கவிதைகள்

ஒரு தூசி துகளாக இருத்தல்

நான் காற்றோடு நகரும் ஒரு தூசி துகள் போல்
இருக்க விரும்புகிறேன்.

அது எல்லா இடங்களுக்கும் செல்கிறது

அது சென்று ஒரு அரசனின் தலையில் அமரலாம்....
அல்லது ஒருவரின் காலில் சென்றும் விழலாம்

மேலும் அது ஒரு சிறிய பூவில் சென்று அமரலாம்,

அது எல்லா இடங்களிலும் சென்று அமரலாம்.

ஆனால் நான் நறுமணம் கொண்ட
ஊட்டமளிக்கக்கூடிய அறிவொளியூட்டக்கூடிய
தூசியின் துகளாக இருக்க விரும்புகிறேன்!

ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி,
அவர் ஏழு வயதில் எழுதியது. 1983 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி இந்தியாவின் துலியாவில் அவரால் விவரிக்கப்பட்டது.

என் மலர் குழந்தைகளுக்கு

"நீங்கள் வாழ்க்கையின் மீது கோபமாக இருக்கிறீர்கள்
சிறு குழந்தைகளைப் போல
தாய் இருளில் தொலைந்தது போல்
நீங்கள் விரக்தியை வெளிப்படுத்துகிறீர்கள்
உங்கள் பயணத்தின் பயனற்ற முடிவில்

அழகைக் கண்டறிய அசிங்கத்தை அணிகிறீர்கள்
உண்மையின் பெயரால் நீங்கள் எல்லாவற்றையும் பொய் என்று பெயரிடுகிறீர்கள்
அன்பின் கோப்பையை நிரப்ப நீங்கள் உணர்ச்சிகளை வெளியேற்றுகிறீர்கள்.
என் அன்பான குழந்தைகளே, என் அன்பே
உங்களுடன், உங்கள் இருப்புடன், மகிழ்ச்சியுடன்
போர் செய்து எப்படி அமைதியைப் பெற முடியும்

துறவுற உனது முயற்சி போதும்
ஆறுதலின் செயற்கை முகமூடி போதும்
இப்போது தாமரை மலரின் இதழ்களில் ஓய்வெடு
உன் கருணையுள்ள அன்னையின் மடியில்
உன் வாழ்க்கையை அழகிய மலர்களால் அலங்கரிப்பேன்
உன் தருணங்களை மகிழ்ச்சியான நறுமணத்தால் நிரப்புவேன்
நான் உன் தலையை தெய்வீக அன்பால் அபிஷேகம் செய்வேன்

ஏனென்றால் நீ உள்ளாகும் சித்ரவதையை என்னால் இனியும் தாங்க முடியாது
மகிழ்ச்சியின்க் கடலில் உன்னை மூழ்கடிப்பேன்
எனவே நீ கடவுளுக்குள் உன்னை இழக்கிறாய்

உங்கள் சுயத்தினுள் சிரித்துக் கொண்டிருக்கிறார்
எப்பொழுதும் உன்னை கிண்டல் செய்ய ரகசியமாக மறைந்துள்ளார்
விழிப்புடன் இருங்கள், நீங்கள் அவரைக் கண்டுபிடிப்பீர்கள்
உங்கள் ஒவ்வொரு இழையையும் பேரின்ப மகிழ்ச்சியுடன் அதிர்வுறும்
முழு பிரபஞ்சத்தையும் ஒளியால் நிரப்புகிறார்.

ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி, 1972 இல் தனது அமெரிக்காவிற்கு முதல் பயணத்தில் சாதகர்களுக்கு கூறியது.

நான் ஒரு மலையைப் பார்க்கிறேன்

என் ஜன்னலிலிருந்து ஒரு மலையைப் பார்க்கிறேன்

ஒரு பழங்கால முனிவர் போல் நிற்கிறது

ஆசையற்றவர், அன்பு நிறைந்தவர்.

எத்தனையோ மரங்கள் எத்தனையோ பூக்கள்

மலையை எப்பொழுதும் அழிக்கிறார்கள்.

அதன் கவனம் சிதறுவதில்லை

மற்றும் மழை பெய்யும் போது

பல மேகங்கள் வெடிப்பது போல

அது மலையை பசுமையால் நிரப்புகிறது,

புயல் வேகமாக வரலாம்,

கருணையால் ஏரியை நிரப்புகிறது

மேலும் ஆறுகள் கீழ்நோக்கி ஓடுகின்றன

அழைக்கும் கடலை நோக்கி.

சூரியன் மேகங்களை உருவாக்கும் மற்றும்

காற்று அதன் இறகுகள் கொண்ட இறக்கைகளால்

மலை மீது மழையை சுமந்து செல்கிறது.

இது தான் நித்திய நாடகம்

மலை பார்த்துக் கொண்டிருக்கிறது

ஆசைகள் இல்லாமல்.

ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி, 2002.

SHARE PAGE